
அம்மாவும்
அப்பாவும்
அவளும்
கைகளைக் கோர்த்தபடி
காட்சி தருகின்றார்கள்!
மகிழ்ச்சி வானத்தில்
பறவைகளும் வில்லும்
சிரித்துக் கொண்டிருக்கின்றன!
சரியாக பேசவே தெரியாத
அந்த மழலை
தன்
இதயத்தில் இருக்கும் அன்பை
இதைவிட சிறப்பாய்
எப்படி சொல்ல முடியும்!
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.


