ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 மே, 2009

மாற்றம்




மனித சங்கிலி!
கடையடைப்பு!
அன்பானவர்களின் உண்ணாநிலை!
பொது வேலை நிறுத்தம்!
உலக தமிழர்களின் தீக்குளிப்பு!
பட்டியல் நீண்டுகொண்டே போகிறது
ஈழத்தில் இறந்தவர்களின் பட்டியலோடு
போட்டி போட்டுக் கொண்டு – ஆனால்
எதுவும் மாறுவதாகவே தெரியவில்லை!

செய்தி-இலங்கை ரானுவம் தீவிர தாக்குதல்-2000 அப்பாவி தமிழர்கள் பலி.

கைவிட்ட காவல் தெய்வம்




வீடுபுகுந்த ரானுவவீரர்கள்
தமிழ்ப் பெண்களின்
கற்பை சூரையாடும்போது
மாதந்தோறும் பொங்கலிட்டு
மாசிமாதம் கிடாய்வெட்டி
தலைமுறை தலைமுறையாய்
வணங்கி வந்த
ஊரின் எல்லையில்
கம்பீரமாய் வீற்றிருக்கும்
காவல் தெய்வம்
கடைசிவரை வரவேயில்லை

புதன், 15 ஏப்ரல், 2009

புத்தன்சொல்லை மறந்தவர்களே!

என்ன பாவம் செய்தது எம்மினம்?
பிழைக்க வழிதேடி வந்து
நீங்கள் பிழைக்கவும் வழிசெய்தது
ஒருவேளை குற்றமாக இருக்கலாம்!
உங்களின் மிருககுணம் அறியாமல்
சகோதராய் பழகியது குற்றமாகலாம்!
ஆங்கிலேயர்கள் நாட்டை கைப்பற்றி
உங்களை வருத்தியபோது
உயிரையும் கொடுத்து காப்பாற்றியது
எம்தமிழனம் என்பதை மறந்தீர்கள்!
செய்நன்றியை கொன்றுவிட்டு –இப்போது
செய்தவர்களையும் கொன்று கொண்டிருக்கிறீர்கள்!
நீங்கள் போற்றுவதெல்லாம் புத்தத்தை-ஆனால்
வேண்டுவதெல்லாம் ரத்தத்தையா?
புத்தன்சொல்லை காற்றில் பறக்கவிட்டு
புத்தன்பல்லை மட்டும்காப்பாற்றி என்னபயன்
என் அண்டை தேசத்தவர்களே!

சனி, 4 ஏப்ரல், 2009

ஈழக் கவிதைகள்

ஈழம்



தங்களுடைய பதவிநாற்காலிக்காக
தமிழகத்திலிருந்து இந்திமொழியை
விரட்டிய கூட்டம்
மடிந்துபோகும் தமிழினத்திற்காக
அறிக்கை மட்டும்
விட்டுக் கொண்டிருக்கிறது


என் நிலை

என் உடன்பிறந்தோரெல்லாம்
உயிர்விடும் நேரத்தில்
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
ஒன்றுமறியாதவனாக


கடவுளிடம் கேள்வி



கல்மனம் படைத்த கடவுளே
உன்மனைவியை கடத்தினால் மட்டுமா
இலங்கைக்கு செல்வாய்
ஆமென்று சொன்னால்
அதையும் செய்வதற்கு தயார்
ஆனால் உன் மௌனத்தால்
எம் இனமல்லவா இல்லாமல்
போய்க் கொண்டிருக்கிறது


சொல்லுங்கள்



அனுமன் வைத்த தீ
இன்னுமா எரிந்து கொண்டிருக்கிறது
என் தமிழ்க்குழந்தைகள்
வாழும் இலங்கையில்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

வீர வணக்கம் !!!


நண்பனுக்காக என்றொரு கவிதையை எழுதியிருந்தேன்.முத்துகுமார் தன் உயிரை தியாகம் செய்யும் முன்பே.அதை சற்று திருத்தி தற்போது வெளியிட்டு அந்த தியாகிக்கு வீர வணக்கம் செய்கிறேன்.

செந் தீயால்
சாவை சந்தித்தாய்
பாவப்பட்ட மக்களான
பச்சை தமிழினத்துக்காக

தலைமுறைகள் சில
தடம்தெரியாமல் போனபின்னும்
மாற்றங்கள் என்றெதுவும்
மாறவில்லை நண்பா

சொந்தமண்ணில் கால்பதித்தால்
சொந்தமில்லாமல் போய்விடுகின்றது
கன்னிவெடியில் சிக்கி
கைகளும் கால்களும்

உயிருக்கு பயந்து
நாடுகடந்து போனாலும்
வாழ்வதற்கொரு வழி
எங்குமில்லை நண்பா

தாய்மண்ணை காக்கா
கூட்டம் உயிர்விடும்போது
உயிரைக் காக்க
விட்டிருக்கிறோம் தாய்மண்ணையே

எங்களிடம் மிச்சமிருப்பதெல்லாம்
இறந்தவர்களின் நினைவுகளும்
இருப்பவர்களின் கனவுகளும்
மட்டுமே நண்பா

ஈழம் பற்றிய சிந்தனைக்கு fortruetamilan.blogspot.com க்கு செல்லுங்கள்.

வீர வணக்கம் வீர வணக்கம்!!!