ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 நவம்பர், 2009

காதல் கவிதை




ஒற்றை சிவப்பு ரோஜாவை
கையில் வைத்துக் கொண்டு
பூ பிடித்திருக்கின்றதா என்றாய்
ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.
வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!
இல்லை இல்லை
ஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றேன்!

திங்கள், 16 நவம்பர், 2009

காதல் கவிதை



ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்
புதியதாக தொடங்குகிறது
உனக்கான என் காதல்!

செவ்வாய், 10 நவம்பர், 2009

காதல் கவிதை



நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
பேசாமல் போன அந்த நாட்களில்தான்
உன் காதல் அதிகமாக பேசியது
கவிதையாக!

காதல் கவிதை




வெட்கம் சிந்தும் பார்வை
நகை கடிக்கும் பற்கள்
மனதினை மயக்கும் தாவணி
நீ அப்படியே இருக்கிறாய்!
நான்கு வருட நகரவாழ்க்கையில்
நான் தான் மாறிவிட்டேன்!

வியாழன், 29 அக்டோபர், 2009

காதல் கவிதை




முகத்தினை மூடியென்னபயன்
அதான் மொத்த அழகையும்
காட்டிக் கொடுத்துவிட்டதே
உன் கண்கள்

காதல் கவிதை



நீ
சுற்றுகின்ற ஒவ்வொறு முறையும்
தூய்மையாகிக் கொண்டே போகிறது
துளசி!

புதன், 5 ஆகஸ்ட், 2009

புரியாதவள்




நேற்று வரை பாதுகாத்து வைத்திருந்த
எந்தன் இதயத்தை உந்தன் பருந்து பார்வையால்
கொத்திக் கொண்டு பறந்து போனாய்,
அதை உனக்கு பரிசாக கொடுக்க வந்தபோது!

புதன், 22 ஜூலை, 2009

பாவம் ரோஜாக்கள்




உன் வருகையை எதிர்பார்த்து
என் கையிலிருக்கும் ரோஜாக்களெல்லாம்
வாடிப்போய் விட்டன்!
சீக்கிரம் வந்து விடு
பாவம் ரோஜாக்கள்!

காதல் கனி




நன்கு காய்த்த மரத்தில்
கல்லெடுத்து அடித்துக் கொண்டிருந்தேன்!
கல்களே கிடைத்துக் கொண்டிருந்தன
நீ பரிதாப் பட்டபோதுதான்
கிடைத்தது... காதல்கனி!

வியாழன், 16 ஜூலை, 2009

ஆதரவு தாருங்கள்




காதல் கவிதைகள் எழுதும்
ஒருகாதல் அனாதை நான்!
யாராவது உங்கள் காதலை
கொடுத்துச் செல்லுங்கள்,
எனக்குத் துணையாக!

கடவுளின் குழந்தை




ஆதாமுக்காக ஏவாலை மட்டும்
படைத்த ஆண்டவன்!
எனக்காக படைத்திருக்கிறான்
ஏராளமான பெண்களை!

வெள்ளி, 22 மே, 2009

அன்னையான காதல்




தாளாட்டுப் பாடி
தட்டிக் கொடுத்து
தூங்க வைக்கிறது காதல்!
உன்னைப் பற்றி
கனவு காணச் சொல்லி!

அபிசேகம்



அம்மனுக்கு அபிசேகம் செய்ய
ஆலையத்திற்கு சென்றேன்!
பீடம் மட்டும் இருப்பதாக
புலம்பிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்!

இந்த அதிசயத்தை சொல்ல
உன் வீட்டிற்கு வந்தால்- ஆச்சிரியம்!
உனக்கு அபிசேகம் செய்ய
அங்கே இருக்கிறார் அம்மன்!

தொடுவானம்




இடம் மாறிக் கொள்ளலாம்
கொஞ்ச காலம் மட்டுமென,
ஆகாயம் இறங்கி வந்து
பூமியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது
உன்னை சுமக்க ஆசைப்பட்டு!

மழை



கைகளில் இருக்கும் குடையை
மடக்கி வைத்திடு!
தேவதையின் ஆசிர்வாதங்கள்
உன்னைத் தேடி வருகின்றன
மழையின் ரூபத்தில்!

வரம்



காதல் கவிதை
எழுத மட்டும்
வரம் கொடுத்தாள்
காதல் தேவதை!

காதல் கவிதை


காதலில் காமம்
கடுகளவும் இல்லையென
நானும் காதலியும்
விவாதம் செய்ததில்
விரையமானது நேரம்

காலம் கடந்த்தில்
காரிருள் சூழ்ந்தது
கைதவறி காதல்
கீழே விழுந்தது

பதறிய படியே
காதலை தேடும்போது
கையில் தட்டுப்பட்டது
இருவரின் காமமும்

என்ன செய்ய?




உன் வீட்டு
வாசல் கதவை
சாத்திச் சென்றார்
உன்அப்பா!

உன் அறை
ஜன்னல் கதவை
திறந்து வைத்தாய்
நீ!

என்ன செய்வதென தெரியாமல்
அங்கேயே நின்றேன்
நான்!

விலகி இரு



அன்பே
உன் தோழிகளிடமிருந்து
எப்போதும் விலகியே இரு
ஏனென்றால்
நீ அருகிலிருக்கும் போது
அவர்கள் மங்கலாகவே தெரிகின்றனர்
எல்லோர் கண்களுக்கும்!

காதல்



மனங்களை இணைக்கும்
மதங்களை பிணைக்கும்
ஒரே மந்திரச் சொல்!