ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 நவம்பர், 2009

காதல் கவிதை



ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்
புதியதாக தொடங்குகிறது
உனக்கான என் காதல்!

செவ்வாய், 10 நவம்பர், 2009

காதல் கவிதை



நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
பேசாமல் போன அந்த நாட்களில்தான்
உன் காதல் அதிகமாக பேசியது
கவிதையாக!

காதல் கவிதை




வெட்கம் சிந்தும் பார்வை
நகை கடிக்கும் பற்கள்
மனதினை மயக்கும் தாவணி
நீ அப்படியே இருக்கிறாய்!
நான்கு வருட நகரவாழ்க்கையில்
நான் தான் மாறிவிட்டேன்!

புதன், 5 ஆகஸ்ட், 2009

புரியாதவள்




நேற்று வரை பாதுகாத்து வைத்திருந்த
எந்தன் இதயத்தை உந்தன் பருந்து பார்வையால்
கொத்திக் கொண்டு பறந்து போனாய்,
அதை உனக்கு பரிசாக கொடுக்க வந்தபோது!

வெள்ளி, 22 மே, 2009

அழகுக்கு காரணம்




முருகப் பெருமானின்
முகம் தொட்டு
விபூதி யெடுத்தாய்!

வியந்து போனேன்
அழகன் மேலும்
அழகாவது கண்டு!

சனி, 18 ஏப்ரல், 2009

ஜன்னல்

ஜன்னல்



நகரத்தில் இருக்கும்
ஜன்னல்கள் எல்லாம்
களவுக்கு பயந்தோ-இல்லை
காற்றுக்கு பயந்தோ
திறக்கவேப் படுவதில்லை
உந்தன் இதயத்தினைப் போல

வெள்ளி, 20 மார்ச், 2009

காதல்-உரைநடைக் கவிதை

காதல் உலகத்தையே மாற்றும் சக்தி.காந்தியடிகள் முதல் ஷிட்லர் வரை எல்லோரையும் கட்டிப் போட்ட சக்தி.அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் நமக்கு உறுதியாப் படுகிறது.

அன்னல் காந்தியடிகள் தன் குடும்பத்தைவிடவும் தேசத்தின் மீது அளவுகடந்த காதல் கொண்டிருநதவர்.கஸ்தூரிபாய் இறந்து அவரை எரியூட்டிக் கொண்டிருந்த சமயம் சுடுகாட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் வீடு திருப்ப தொடங்கினர்.ஆனாலும் அன்னல் அவ்விடம் விட்டு அகலவில்லை.அவரிடம் வந்து சிலர் வீடுதிரும்பலாம் எனச் சொன்னபோது அவர் சொன்னார்,என்னுடனே இத்தனை காலம் இருந்தவளை பிரிந்த துயரத்தில் இருக்கிறேன்.எத்தனையோ பணிவிடைகளை செய்தவளை காதலோடு செய்தவள் எரியும் வரைக்கும் கூட உடனிருக்காமல் சென்றால் எங்கள் காதல் என்னை கேள்விகள் கேட்கும் என்றார்.

அகிம்ஷா மூர்த்திக்கு மட்டுமல்ல,லட்சக் கணக்கான ஆட்களை கொன்றுகுவித்த ஷிட்டருக்கும் காதல் இருந்தது.ரஷ்யாவின் படைகள் தன்னை சூழ்ந்து கொண்டபோது அவர்களிடம் மாட்டாமல் தன்மையாக உயிர் துறக்க தற்கொலை செய்ய துனிந்தான்.ஆனால் அப்போது அவன் தனியாக இல்லை தன் காதலியுடன் இருந்தான்.ஷிட்லரைவிட அவளுக்கு வயது குறைவு.எவ்வளவோ எடுத்துக்கூறியும் தப்பிப்பதற்கு மறுத்துவிட்டாள்.இறுதியாக ஷிட்லரை படைகள் நெருங்கிய போது ஷிட்லருடன் அவன் காதலியும் தற்கொலை செய்திருந்தனர்.உலகின் மிகக் கொடுரனாக வர்ணனை செய்யப்படும் ஷிட்லருக்கு இருந்த காதலைக் கண்ட உலகம் இன்றுவரை அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.


அப்படிப்பட்ட காதலை உரைநடைப் போல தபூசங்கர் என்னும் கவிஞர் எழுதியிருந்தார்.அவருடைய வழியில் நான் முயன்றுப் பார்த்தவைகள் இவைகள்.



நானும் நீயும் இரண்டு வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறோம்.நான் உன்னை சீன்டுவதும் அதற்கு நீ பதிலுக்கு சீன்டுவதென பொழுதுகள் போகும்.அன்று என் முறை என்பதை உன் மௌனம் காட்டிக்கொடுத்தது.நீ வசிக்கும் ஊரின் மண் மட்டும் ஏன் சிவப்பு நிறத்திலிருக்கின்றது என்றேன்.காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் என்றாய்.நானும் நிலத்திடமே என்னவென விசாரித்தேன்.நீ வெக்கப்படும்போது நிலம் பார்த்துதான் இருப்பாயாமே அந்த வெக்கத்தைப்பார்த்தே சிவந்துவிட்டதாம் என்றேன். நீ வெக்கப்பட்டு நிலத்தை பார்த்தாய் அது இன்னும் ஆனது சிவப்பாக.



அன்று நீ கடற்கரைக்கு போகலாமா என்று ஆசையுடன் கேட்டாய்.அதற்கு நான் கடற்கரைக்கு மட்டும் வேண்டாம் வேறு எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றேன்.எதற்காக கடற்கரைக்கு மட்டும் வேண்டாம் என்கிறீர்கள் என்றாய் சின்ன கோபத்துடன்.நெடு நாட்களாகவே நிலவைப் பிடிக்க அலைகள் விரும்புவதாய் தகவல் என்றேன் உன்னைப் பார்த்தபடி.உன்னைதான் நிலா என்கின்றேன் என்பதை புரிந்துகொண்டு மெதுவாகச் சொன்னாய் இந்த நிலவுக்கு சொந்தக்காரன் ஒருவன் என்னகில் இருக்கின்றான்,அவன் பாதுகாப்பான் என்றாய்.இருவரும் நடக்க தொடங்கினோம் கடற்கரையை நோக்கி.



நமக்கு திருமனம் ஆகி இதோடு இரண்டு மாதம் முடியப்போகிறது.ஆனாலும் உன்மேல் உள்ள காதல் வளர்ந்து கொண்டே இருந்தது எனக்கு.அன்று விடியல்காலையில் நீ குளித்து முடித்துவிட்டு ஈரக்கூந்தலுடன் கோலம் போட்டுக் கொண்டிருந்தாய்.நான் அப்பொழுதுதான் எழுந்து பல்விளக்கிவிட்டு வாசல் பக்கம் வந்தேன் நீ கோலம் போடும் அழகை ரசிப்பதற்கு.வானத்து வின்மீன்கள் எல்லாம் நம் வீட்டின் வாசலில் இருப்பது போல பிரம்மை ஏற்பட்டது எனக்கு.நீ கோலம் போடுவதற்கு வைத்த புள்ளிகள் வின்மீன்களாய் தெரிந்தன எனக்கு.ஏய் அழகுப் பேயே கோலம் போடுவதை நிறுத்து என்றேன்.ஏன் என்ற கேள்வியை கண்களில் காட்டியபடியே எழுந்து நின்றாய்.எத்தனை முறை நாம் பூமியிலிருந்து வின்மீன்களை ரசித்திருக்கின்றோம்,இன்று பூமியின் வின்மீன்களை அவை ரசிக்கட்டுமென கூறினேன்.ச்சீ இவ்வளவு தானா நான் பயந்து போய்விட்டேன்.சரிசரி நீங்க உள்ள போங்க நான் கோலத்தை முடிச்சிட்டு வந்துடறேன் என்றாய் கெஞ்சலாய்.ஆனால் உன்னை கோலத்தை முடிக்க விடாமல் உள்ளே இழுத்து வந்துவிட்டேன்.நம்மைப் பார்த்து விடிவள்ளி சிரித்துக்கொண்டிருந்ததுவெறும் புள்ளிகளுடன் வாசலில் இருக்கும் கோலத்தைக் கண்டு கேள்விக் கேட்போரிடமெல்லாம் எல்லாம் என் கணவர் செய்த கோலமென செல்ல கோபத்துடன் புலம்பிக் கொண்டிருந்தாய்.நம்முடைய காதலைப் பார்த்து அக்கம்பக்கத்தில் வியந்து போனார்கள்.

காதல்,love,உரைநடைக் கவிதை

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

காதல் தேவதைக்கு

காதல் தேவதைக்கு

இது காதல் மாதம்.மதங்களையும் மொழிகளையும் தாண்டி மனங்களை இணைக்கும் மாதம்.மனிதனை கடவுளாக மாற்றும் மாதம்.அன்பு என்றொரு அச்சாணி கொண்டு மனிதத்தையே சுழலச் செய்யும் மாதம்.

உலக அளவில் காதலின் புனிதம் அறியப்பட்டிருக்கும் நிலையில் காதலர்கள் என்ற பசு போர்வைக்குள் இருக்கும் காமப் புலிகளை கண்டுப்பிடித்து தண்டிக்க வேண்டியதும் நம்முடைய கடமைதான்.
உண்மைக் காதலைப் போற்றுவோம்.உலகத்தை உய்விப்போம்.

என்னுடைய கவிதைகளைப் படித்து என் காதலை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு கனவு காதலிகளை தந்து கவிதை எழுத உதவிய காதல் தேவதைக்கு இந்த கவிதைகள் சமர்ப்பனம்.

காதல் கவிதைகள் மட்டுமல்ல
காதல் செய்பவர்களும் அழகுதான்.