ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 மே, 2010

மயிலிறகு சொல்லும் கதை






குட்டிப் போடுமென

குழந்தை தனமாகவோ!

விட்டுப் போன

காதலியின் நினைவாகவோ!

சுட்டுத் தந்த

நண்பனின் நினைவாகவே!

எல்லோரிடமும் இருக்கிறது

ஒரு குட்டி மயிலிறகு

கதைகளைச் சொல்லி மகிழ்ந்த படி!

வெள்ளி, 20 மார்ச், 2009

நண்பர்களுக்காக ஒரு கவிதை



இந்த கவிதை என்னுடைய நண்பர்களுக்காக எழுதப்பட்டது.நான் அதிகம் காதல் கவிதைகளைப் பற்றிதான் எழுதுவேன்.ஆனால் இந்த முறை சற்று மாற்றம் ஏற்படக் காரணம்,எங்களுடைய பிரிவு.பி.டெக் படிப்பு இந்த வருடத்தோடு முடிகின்றது.நான்கு வருடம் பழகிய நண்பர்களை விட்டு பிரிந்து செல்வது மிகுந்த மன வேதனையை தருகின்றது.இருந்தாலும் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப புரட்சியில் பிரிவு சற்றுதான் பாதிக்கப் போகின்றது.அதை தான் கவிதையாக எழுதியுள்ளேன்.உங்களுடைய கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

கல்லூரியின் முதல் நாளில்
புன்னகைப் பூச்செண்டுகளைப் பரிமாறி
அறிமுகம் செய்து தொடங்கினோம்
அற்புதமான நட்பென்னும் பயணத்தை!

இன்பமோ துன்பமோ எதுவந்தாலும்
ஒன்றாக அதனை சந்தித்தோம்!
ஒருவருடைய வளர்ச்சி பற்றி
மற்றொருவர் தானே சிந்தித்தோம்!

என்னுள்ளும் இருக்கிறது திறனென
எனக்கு ஊக்கம் கொடுத்து
சாதாரண மனிதனாய் இருந்தவனை
சாதனை மனிதனாய் மாற்றினீர்கள்!

முன்பெல்லாம் என்பேனா கசிந்தால்
கரையாகிடும் வெற்று காகிதங்கள்!-ஆனால்
இப்பொழுதெல்லாம் என்பேனா கசிந்தால்
கவிதையாகின்றன அதே காகிதங்கள்!

உணவு உடை உள்ளமென
எல்லாம் பகிர்ந்து கொண்டு
ஒருதாய் பிள்ளைகளாய் நாமிருக்கும்போது
வருகிறது பிரிவென்னும் பெருஞ்சக்தி!

கணினி மாணவர்களாய் இருந்துகொண்டு
பிரிவைப்பற்றி புலம்புதலில் அர்த்தமில்லை!
உலகையே இணைக்கும் இணையத்தில்
நம்மையும் இணைத்துக்கொண்டால் வருத்தமில்லை!