இது காதல் மாதம்.மதங்களையும் மொழிகளையும் தாண்டி மனங்களை இணைக்கும் மாதம்.மனிதனை கடவுளாக மாற்றும் மாதம்.அன்பு என்றொரு அச்சாணி கொண்டு மனிதத்தையே சுழலச் செய்யும் மாதம்.
உலக அளவில் காதலின் புனிதம் அறியப்பட்டிருக்கும் நிலையில் காதலர்கள் என்ற பசு போர்வைக்குள் இருக்கும் காமப் புலிகளை கண்டுப்பிடித்து தண்டிக்க வேண்டியதும் நம்முடைய கடமைதான்.
உண்மைக் காதலைப் போற்றுவோம்.உலகத்தை உய்விப்போம்.
என்னுடைய கவிதைகளைப் படித்து என் காதலை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு கனவு காதலிகளை தந்து கவிதை எழுத உதவிய காதல் தேவதைக்கு இந்த கவிதைகள் சமர்ப்பனம்.
காதல் கவிதைகள் மட்டுமல்ல
காதல் செய்பவர்களும் அழகுதான்.








