ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

காமக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 மே, 2009

ஆதரவு





பெண்பித்தன் என்றென்னை
புகழ்ந்திரும் எதிர்க்கூட்டம்
வாய்பிளந்து பார்க்கிறது
வருவோர் போவோரையெல்லாம்!

சாலையில் செல்லும்
சேலைகளின் விலகல்களை
உற்றுநோக்கும் உயர்ந்தவர்கள்
உரிமையோடு வசைபாடுகின்றனர்!

காமக் கவிதை
கவிதையின் ஓர் அங்கம்
என்கருத்தை ஆதரிப்போரெல்லாம்
என்னுடைய சங்கம்!

இரவு உடை




இரவு உடையில்
உன்னைக் கண்ட
அந்த இரவை
விடியவே விடவில்லை நான்!

கைவிட்ட காவல் தெய்வம்




வீடுபுகுந்த ரானுவவீரர்கள்
தமிழ்ப் பெண்களின்
கற்பை சூரையாடும்போது
மாதந்தோறும் பொங்கலிட்டு
மாசிமாதம் கிடாய்வெட்டி
தலைமுறை தலைமுறையாய்
வணங்கி வந்த
ஊரின் எல்லையில்
கம்பீரமாய் வீற்றிருக்கும்
காவல் தெய்வம்
கடைசிவரை வரவேயில்லை

வரம்




குழந்தை வரம் வேண்டி
கோவிலுக்கு சென்றவளின் குழந்தை
சாமியாரின் சாயலில் இருப்பதாய்
பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள்!

கஜூராகோ




உடையனியாத சிலைகள் செய்யும்
செயல்களைக் கண்டு
வியந்து போகின்ற கூட்டம்
படங்களை எடுத்து தள்ளுகிறது!
பணங்களை வாரி இறைக்கிறது!
நமக்கு திட்டுவதை தவிற
வேறெதுவும் தெரியவில்லை!

வியாழன், 16 ஏப்ரல், 2009

காமம்

காமம்
குறிப்பு -
காதல் போல காமமும் ஒரு உணர்ச்சிதான்.வள்ளுவனே பாட்டெழுதி அங்கிகாரம் கொடுத்துவிட்டான்.அதன்பிறகு நமக்கேன் தயக்கம்.
தொடர்வோம்.

கவிதைகள்
காகித மேனியில்
பேனா மைவிந்து
செய்திட்ட புணர்ச்சியால்
பிறந்திட்ட குழந்தைகள் !

சேர்
நேற்று பெய்த மழையில்
தெருவெங்கும் சிறுசிறு குளங்கள்
நீமுன்னும் நான்பின்னுமாய் செல்கிறோம்
சேராக கூடாதென
உன்ஆடை மேல்செல்ல
சேரானது என்னவோ என்மனதுதான் !

உண்மை
கவிதை எழுதியே
காமம் தீர்க்கின்றேனென
கடுஞ்சொல் பேசுகிறாய் !
காமம் தீர்க்க
கவிதை வேண்டாம்
கையே போதும் !

வசதி
இரவுஉடை அணிந்திருந்தாய்
உந்தன் வசதிக்காக
எனக்கும் அது வசதியாகவே இருந்தது !

மிருகம்
கொஞ்சிச் சென்றவள்
அஞ்சிச் செல்லும்போது
அறிந்து கொள்கிறேன்
நான் ஆணென்பதை !

வரதட்சனை
ஒரு பெண்ணிடம்
பொருள் கொடுத்து
காமம் நடந்தால்
அது விபச்சாரம்
ஒரு பெண்ணிடம்
பொருள் பெற்று
காமம் நடப்பின்
அது சம்சாரம்

பெருளுடைய காமம்
உணர்வுகள் அற்றது
பொருளற்ற காமம்
உணர்வுகள் உடையது

வரதட்சனை என்ற
பெறும்பொருள் பெற்று
காமம் பெறுகின்றவர்களும்
விபச்சா ரன்கள்தான்