ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

காமக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 மார்ச், 2010

இரவுப் பெண்




சீவி சங்காரித்து
அலுவலக்ம் போக ஏகம் பேர்
நிற்கும் ரயில் நிலையத்தின்
ஓர் அதிகாலை….
வந்து நிற்கின்றாள்
பெண்ணொருத்தி!.
இரவு தூங்கவில்லையென
அந்தப் பெண்ணின் கண்கள் சொல்லுகின்றன
அதிகம் உழைத்தை அவள் சோர்வு சொல்லுகின்றன
நீங்கள் தவறாக யூகம் செய்யாதீர்
அவள் கால்சென்டரில் வேலை செய்யும்
கன்னிப்பெண்!

வெள்ளி, 22 மே, 2009

விலைமாது



என் பசிக்கு
அவள் உணவானாள் - ஏனென்றால்
அவள் பசிக்கு
அவளிடம் இல்லை உணவு!

பந்தையம்




உள்ளே நடக்கும்
ஓட்டப் பந்தயத்தில்
ஒன்றாவதாக வருபவனுக்கே
தாய்வயிற்றில் இருப்பதற்கான
தார்மீக உரிமை!

காதலாக மாறிய காமம்




காதல் காமமாக மாறிய கதைகள்
பல தெரிந்திருக்கலாம் உங்களுக்கு
தெரிந்து கொள்ளுங்கள்
காமம் காதலாக மாறிய கதையை!

அம்பாளுக்கு சேவை செய்யும்
அம்மை முகத்தோடு அரை ஊனமான
ஆத்திகன் தான் நம் கதாநாயகன்!

கட்டிய பெண்டாட்டி இரண்டு மாதத்தில்
கட்டழகு மிக்கவனோடு ஓடி விட்டாள்
ஊரிலிருந்து வரும் பால்ய நண்பனின்
குத்தல் பேச்சிலிருந்து தப்பிக்க
உடனடிதேவை ஒரு வாடகை மனைவி!

ஊனம் நிறைந்தவனுக்கு ஊரில் பெண்ணில்லை
உண்மையைச் சொன்னால் உதவவும் ஆளில்லை
அன்று கோவிலுக்கு சென்ற கால்கள்
அடைந்த தென்னவோ வேசி வீட்டை!

தயக்கம் நிறைந்து பெண் கேட்க
தாசியோ சிரிப்பில் மூழ்கினாள்
ஓர்இரவுக்கு மட்டும் செல்பவளை
ஒருவாரம் வைத்திருக்க செலவுமேல் ஆகுமென்றாள்!

கிடைத்ததே வரமென கேட்டதை கொடுத்தான்
வரிசையாய்நின்ற மங்கைளில் ஒருத்தியை பெற்றான்
வீட்டில் தனியறை ஒன்றைக் காட்ட
வேசி திகைத்துப் போனாள்!

கடந்த விஷயங்களை பகிந்து கொண்டவுடன்
எல்லாம் அறிந்தவளாய் அமைதியானாள்
அந்தி மறைந்து பொழுது புலர்ந்ததும்
வந்தான் எள்ளிநகையாடும் கொள்ளிவாய் நண்பன்!

செதுக்கி வைத்த சிற்பம் போல்
சினேகிதனின் மனைவியிருக்க சீண்டிப் பார்த்தான்
கம்பீர உடல்தனை காண்பித்தான்!
காசினால் வலை விரித்தான்!

கண்டு கொள்ளாமல் போனவளை
கண்டு இவன் திகைத்தான்!
மன்மதன் என்றுதன்னை கொண்டிருந்த எண்ணங்களை
தூக்கிஎரிந்து அவள் காலில் விழுந்தான்!

பார்த்திருக்கிறேன் பல பத்தினிகளை
கணவன் கண்ணயர்ந்த்தும் கட்டிலுக்கு வந்தவர்களை
கண்ணதில்லை உன்னைப் போல் கற்புக்கரசி ஒருத்தியை
நடந்தவைகளை நண்பனிடம் சொல்லாதே என
நடையைக் கட்டினான் நடை பிணமாக

ஊனம் உடலில் இருக்கும் வரை
ஒருவருக்கும் துன்பமில்லை
அது மனதிலும் வந்துவிட்டால்
விரட்டியடிப்பதை தவிர வேறு வழியில்லை
பூசாரிக்கு புத்தி சொல்லி விட்டு
புறப்பட்டாள் பழைய இடத்திற்கு!

கருனையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை
கடந்து செல்லுகையில் கண்ணீர் சிந்தினாள்!
அவளின் கண்ணீரிலும் காதல் இருந்தது!

காதலும் காமமும்




வீதியில் நடக்கையில்
எதிர்வரும் உன்னை
விழிகள் தீண்டுகின்றன!

பார்வை பரிமாற்றங்கள்
நடந்த பின்னும்
ஒன்றுமறிதவளாய் நீ செல்கிறாய்!

கடந்த காலத்தின்
காதல் நினைவுகளை
கடந்து நான் செல்கிறேன்!

அன்று
காதலோடு காமமும்
கைகோர்த்து கொண்டதில்
கற்பென்பது கேள்விக் குறியானது!

இன்று
காலம் பலகாத்து
காமம் தீர்ந்ததில்
காதலும் தீர்ந்துபோனது!