ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஜகதீஸ்வரன் காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜகதீஸ்வரன் காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 அக்டோபர், 2010

காதலின் காத்திருப்பு




ஒரு நாள்
மழையோடு வந்தாய்!

மறு நாள்
மலரோடு வந்தாய்!

உந்தன் ஒவ்வொரு வருகையிலும்
உடன்வருபவர்களை வரவேற்கவே
காத்திருப்பதாக பொய் சொல்கிறேன்!

என்றாவது ஒருநாள்
எனக்கான காதலுடன்
வருவாய் என்பதற்காக!.

திங்கள், 3 மே, 2010

மயிலிறகு சொல்லும் கதை






குட்டிப் போடுமென

குழந்தை தனமாகவோ!

விட்டுப் போன

காதலியின் நினைவாகவோ!

சுட்டுத் தந்த

நண்பனின் நினைவாகவே!

எல்லோரிடமும் இருக்கிறது

ஒரு குட்டி மயிலிறகு

கதைகளைச் சொல்லி மகிழ்ந்த படி!

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வருங்கால தமிழகமே



மகனுக்கு சொத்துன்னு
படிக்க வைச்சதை பார்த்திருக்கேன்
பேங்குல பணம் போட்டதை பார்த்திருக்கேன்
வீடு கட்டறத பார்த்திருக்கேன்
கோட்டையே கட்டி கொடுத்த தகப்பனை
இப்பதானே பார்க்கறேன்!

மனித பட்டாம்பூச்சி



கை கால் முளைத்த பட்டாம்பூச்சிக்கு
கல் குத்தும் போது வலிக்குமென
கவலை கொண்டேன்
ஆனால்…
அவளது பாதங்கள் பட்டு
கற்களெல்லாம் பூக்களாக மாறிப்போனது!.

சிலுவை



கரும்பலகையில்
ஆசிரியர் எழுதிப்போன கூட்டல்குறி
மெல்ல மெல்ல வளர்ந்து
சிலுவைக் குறியாகிக் கொண்டிருந்தது
கணித வகுப்பிற்கு வந்த
உன்னை நினைத்து!

பாவிகள்



எல்லா இடங்களிலும்
காதல் புனிதமானது! – ஆனால்
காதலர்கள் தான்
பாவிகளாக்கப்படுகின்றார்கள்!

கோவில்



வெளியே நானும்
உள்ளே கடவுளும்
காத்திருக்கிறோம்
உன் வருகைக்காக!.

விந்தை


நீ
கிள்ளும் போது மட்டும்
சிரிக்கின்றன பூக்கள்!

வெள்ளிக் கிழமை



நீ வருவாய் என்பதற்காக
அலங்காரம் செய்து அமர்ந்திருக்கிறாள்
அம்பாள்!.

சனி, 21 மார்ச், 2009

கஞ்சன்- படக்கவிதை

கஞ்சன்- படக்கவிதை