ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

புதன், 28 ஜனவரி, 2009

ஈழம்

ஈழம்

உண்மை நிலை

இருந்த ஒருவீடும்
இல்லாமல் போனபின்னும்
சந்தோசமாய் தான் இருக்கின்றது
உயிருடன் இருப்பதால்


நண்பனுக்கு...

சயனைடு குப்பியால்
சாவை சந்தித்தாய்
பாவப்பட்ட மக்களான
பச்சை தமிழினத்துக்காக

தலைமுறைகள் சில
தடம்தெரியாமல் போனபின்னும்
மாற்றங்கள் என்றெதுவும்
மாறவில்லை நண்பா

சொந்தமண்ணில் கால்பதித்தால்
சொந்தமில்லாமல் போய்விடுகின்றது
கன்னிவெடியில் சிக்கி
கைகளும் கால்களும்

உயிருக்கு பயந்து
நாடுகடந்து போனாலும்
வாழ்வதற்கொரு வழி
எங்குமில்லை நண்பா

தாய்மண்ணை காக்கா
கூட்டம் உயிர்விடும்போது
உயிரைக் காக்க
விட்டிருக்கிறோம் தாய்மண்ணையே

எங்களிடம் மிச்சமிருப்பதெல்லாம்
இறந்தவர்களின் நினைவுகளும்
இருப்பவர்களின் கனவுகளும்
மட்டுமே நண்பா

காதல் கவிதைகள்

கஞ்சன்
மேடையில் பேசும்போது
வள்ளலாக வார்த்தைகளை தந்துவிட்டு
உன்னிடம் பேசும்போது மட்டும்
கஞ்சனாக மாறிவிடுகிறது
என் தாய்மொழி!




காய்ச்சல்
மழையில் நனையாதே
காய்ச்சல் வந்துவிடும் என்றேன்
‘எனக்கா’ என்றாய் ஆவலாய்
இல்லை மழைக்கு!

பூப்பெய்திய நட்பூ
நேற்றுவரை சிறுவர்களாய்
இருந்தநாம் பெரியவர்களானோம்
உன் தாயின் சேலைகிழித்து
நீ அணிந்து வந்தாய்
என் தந்தையின் வேஷ்டிகிழித்து
நான் அணிந்து வந்தேன்
வழக்கமாய் விளையாடும் தோப்பில்
நெடுநேரம் மௌனமாய் இருந்தபோது
நம்நட்பும் வந்தது காதலாக
நம்மைபோலவேப் பூப்பெய்தி

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

மாற்றம்
நீ என்னை
காதலனாக மாற்றினாய்!
காதல் என்னை
கவியாக மாற்றியது!

அம்பு
எல்லாம் காதல்தான் செய்தது!
நான் வெரும் அம்பு
என்மேல் கோபம் வேண்டாம்!

அம்மாவுக்காக- எழுதாமல் சென்றுவிடுவேனோ?

எழுதாமல் சென்றுவிடுவேனோ?




எங்கோ பிறந்தவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
என்னை பிறப்பித்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

உடன் உண்ணப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உணவு இட்டவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

கைபிடிக்க போகின்றவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
கைபிடித்து சொல்லிக்கொடுத்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

வாலிபத்தை சுமப்பவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
வயிற்றில் சுமந்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

உடன் உறங்கப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உறங்க தாளாட்டியவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

என்னுடன் வாழப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
எனக்காக வாழ்பவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

- ந.ஜகதீஸ்வரன்

படம்