ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஞாயிறு, 29 மார்ச், 2009

கனவு தேசம்



நெடு நாட்களாய்
எதுவும் மாறவில்லை
நாம்வாழும் தேசத்தில்.

மாற்றங்கள் ஆழ்பவர்களின்
பெயரில் மட்டுமே
நடந்து கொண்டிருக்கின்றன.

மக்களின் வாழ்க்கையிலோ
மாற்றங்களின் விதிகள்
பொய்த்துப் போய்விட்டன.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தூக்கம் கலைந்து
எழுந்து விடுகிறோம்.


வந்துபோகும் தேர்தல்களில்
வாக்களித்துவிட்டு வந்துவிடுகிறோம்
மீண்டும் தூங்குவதற்கு.


கனவிலாவது நம்தேசம்
நன்றாக இருப்பதால்.

சனி, 21 மார்ச், 2009

எச்சில்- படக்கவிதை

எச்சில்- படக்கவிதை

அழகு- படக்கவிதை

அழகு- படக்கவிதை

அழகு விதை- படக்கவிதை

அழகு விதை- படக்கவிதை

பூப்பெய்திய நட்பு- படக்கவிதை

பூப்பெய்திய நட்பு- படக்கவிதை

கஞ்சன்- படக்கவிதை

கஞ்சன்- படக்கவிதை

வெள்ளி, 20 மார்ச், 2009

உடல் சாரா கவிதைகள்

உடல் சாரா கவிதைகள்

வானத்தில் கூட
போர் நிகழ்கின்றதா
மழை பெய்தபின் வரும்
வான’வில்’லை பார்த்து
கேள்விகள் எழுப்புகிறது
ஒரு மழலை

எதையுமே சந்தேகத்தோடு
ஆராய்ச்சி செய்திடும்
என்னுடைய சமூகமே
பறவைகளின் எச்சத்தில்
செய்யும் ஆராட்சியை
இதோடு விட்டுவிட்டு
ஏதாவது நல்லதை
செய்யப் பாருங்கள்

வானம் சுற்றியிருந்த
வனத்தின் சாம்பல்கள்
கருமேகமாய் மாறிக்கொண்டிருந்தன
பள்ளிவிட்ட குழந்தையாய்
தாயிடம் திரும்பியது
மழைத் துளிகள்
காசுகொடுத்து வாங்கமுடியாத
வாசமொன்று கிளம்பியது
வறண்ட மண்ணிலிருந்து

நம்முடன் சேர்ந்து
ஒன்றாய் இருந்த
நண்பர்களை யெல்லாம்
மறந்து விடுகிறது
எதிரியை மறக்காத
நன்றிக்கெட்ட மனது

உடல் சாரா கவிதைகள்,

சிற்றன்னையின் கிராமம்


விடுமுறையென்றாலே ஓடிவருவேன்
சிற்றன்னையின் கிராமத்திற்கு
உச்சிபிளக்கும் வெயிலும்
தோகைவிரிக்கும் மயிலாய்
பச்சையுடுத்திய வயலும்
காட்சியளிக்கும் குளுமையாய்
அண்டைவீடும் என்வீடெனே
மழைபொழியும் பாசமாய்
ஆனால் இப்பொழுதோ
வீடெல்லாம் தன்னைச்சுற்றி
வேலி எழுப்பிவிட்டது
விளைநிலமெல்லாம் கல்ஊன்றி
காசுக்காய் விற்கப்பட்டுவிட்டது
செய்வதறியாது திகைத்துக்
கொண்டிருக்கின்றேன் நான்
என்னருகே சிட்டோன்று
நின்று கொண்டிருக்கின்றது
கூடகட்ட இடம்தேடி
வாயில் செத்தைகளுடன்.

இந்த கவிதையைப் பற்றி கட்டூரையைப் படிக்கும் ஆவலிருந்தால் என்னுடைய பட்டாம்பூச்சி (http://jagadeesktp.blogspot.com/) வலைதளத்தில் உள்ள நான் அழும் நிலையிலுள்ள கவிஞன் கட்டூரையைப் பாருங்கள்.

நானொரு அனாதை


நானொரு அனாதை

வாழ்வின் வலிகள்
நிறைந்த நிமிடங்களில்
எனக்கு ஆறுதல்
தாய் மடிமட்டுமே

கடவுலென்னும் கல்மனதுகாரன்
அவளை எடுத்துக் கொண்டபின்
யார்துனையும் இல்லாமல்
தனிமரமாக இருக்கிறேன்

அடுக்கடுக்கான துயரங்களில்
அடையாலம் தொலைக்கிறேன்
அன்பு வேண்டுவோர்
அனுகலாம் அடியேனை

நானும் வள்ளல்தான்

நானும் வள்ளல்தான்

நந்துபோன சேலை
ஏழ்மையின் உண்மையை
எனக்குள் விதைக்கின்றது

வெற்று நெற்றி
கணவன் இறந்ததை
கண்களுக்கு சொல்லுகின்றது

கையிலிருக்கும் குழந்தை
பசியின் கொடூரத்தால்
கதறிக் கொண்டிருக்கிறது

அருகில் இருப்பவரெல்லாம்
கருனையோடு காசுபோட
என்னிடம் திரும்புகிறாள்

நானும் அவளுக்கு
சில்லரைகள் போடுவேன்
வேலை கிடைத்தவுடன்.

காதல்-உரைநடைக் கவிதை

காதல் உலகத்தையே மாற்றும் சக்தி.காந்தியடிகள் முதல் ஷிட்லர் வரை எல்லோரையும் கட்டிப் போட்ட சக்தி.அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் நமக்கு உறுதியாப் படுகிறது.

அன்னல் காந்தியடிகள் தன் குடும்பத்தைவிடவும் தேசத்தின் மீது அளவுகடந்த காதல் கொண்டிருநதவர்.கஸ்தூரிபாய் இறந்து அவரை எரியூட்டிக் கொண்டிருந்த சமயம் சுடுகாட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் வீடு திருப்ப தொடங்கினர்.ஆனாலும் அன்னல் அவ்விடம் விட்டு அகலவில்லை.அவரிடம் வந்து சிலர் வீடுதிரும்பலாம் எனச் சொன்னபோது அவர் சொன்னார்,என்னுடனே இத்தனை காலம் இருந்தவளை பிரிந்த துயரத்தில் இருக்கிறேன்.எத்தனையோ பணிவிடைகளை செய்தவளை காதலோடு செய்தவள் எரியும் வரைக்கும் கூட உடனிருக்காமல் சென்றால் எங்கள் காதல் என்னை கேள்விகள் கேட்கும் என்றார்.

அகிம்ஷா மூர்த்திக்கு மட்டுமல்ல,லட்சக் கணக்கான ஆட்களை கொன்றுகுவித்த ஷிட்டருக்கும் காதல் இருந்தது.ரஷ்யாவின் படைகள் தன்னை சூழ்ந்து கொண்டபோது அவர்களிடம் மாட்டாமல் தன்மையாக உயிர் துறக்க தற்கொலை செய்ய துனிந்தான்.ஆனால் அப்போது அவன் தனியாக இல்லை தன் காதலியுடன் இருந்தான்.ஷிட்லரைவிட அவளுக்கு வயது குறைவு.எவ்வளவோ எடுத்துக்கூறியும் தப்பிப்பதற்கு மறுத்துவிட்டாள்.இறுதியாக ஷிட்லரை படைகள் நெருங்கிய போது ஷிட்லருடன் அவன் காதலியும் தற்கொலை செய்திருந்தனர்.உலகின் மிகக் கொடுரனாக வர்ணனை செய்யப்படும் ஷிட்லருக்கு இருந்த காதலைக் கண்ட உலகம் இன்றுவரை அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.


அப்படிப்பட்ட காதலை உரைநடைப் போல தபூசங்கர் என்னும் கவிஞர் எழுதியிருந்தார்.அவருடைய வழியில் நான் முயன்றுப் பார்த்தவைகள் இவைகள்.



நானும் நீயும் இரண்டு வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறோம்.நான் உன்னை சீன்டுவதும் அதற்கு நீ பதிலுக்கு சீன்டுவதென பொழுதுகள் போகும்.அன்று என் முறை என்பதை உன் மௌனம் காட்டிக்கொடுத்தது.நீ வசிக்கும் ஊரின் மண் மட்டும் ஏன் சிவப்பு நிறத்திலிருக்கின்றது என்றேன்.காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் என்றாய்.நானும் நிலத்திடமே என்னவென விசாரித்தேன்.நீ வெக்கப்படும்போது நிலம் பார்த்துதான் இருப்பாயாமே அந்த வெக்கத்தைப்பார்த்தே சிவந்துவிட்டதாம் என்றேன். நீ வெக்கப்பட்டு நிலத்தை பார்த்தாய் அது இன்னும் ஆனது சிவப்பாக.



அன்று நீ கடற்கரைக்கு போகலாமா என்று ஆசையுடன் கேட்டாய்.அதற்கு நான் கடற்கரைக்கு மட்டும் வேண்டாம் வேறு எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றேன்.எதற்காக கடற்கரைக்கு மட்டும் வேண்டாம் என்கிறீர்கள் என்றாய் சின்ன கோபத்துடன்.நெடு நாட்களாகவே நிலவைப் பிடிக்க அலைகள் விரும்புவதாய் தகவல் என்றேன் உன்னைப் பார்த்தபடி.உன்னைதான் நிலா என்கின்றேன் என்பதை புரிந்துகொண்டு மெதுவாகச் சொன்னாய் இந்த நிலவுக்கு சொந்தக்காரன் ஒருவன் என்னகில் இருக்கின்றான்,அவன் பாதுகாப்பான் என்றாய்.இருவரும் நடக்க தொடங்கினோம் கடற்கரையை நோக்கி.



நமக்கு திருமனம் ஆகி இதோடு இரண்டு மாதம் முடியப்போகிறது.ஆனாலும் உன்மேல் உள்ள காதல் வளர்ந்து கொண்டே இருந்தது எனக்கு.அன்று விடியல்காலையில் நீ குளித்து முடித்துவிட்டு ஈரக்கூந்தலுடன் கோலம் போட்டுக் கொண்டிருந்தாய்.நான் அப்பொழுதுதான் எழுந்து பல்விளக்கிவிட்டு வாசல் பக்கம் வந்தேன் நீ கோலம் போடும் அழகை ரசிப்பதற்கு.வானத்து வின்மீன்கள் எல்லாம் நம் வீட்டின் வாசலில் இருப்பது போல பிரம்மை ஏற்பட்டது எனக்கு.நீ கோலம் போடுவதற்கு வைத்த புள்ளிகள் வின்மீன்களாய் தெரிந்தன எனக்கு.ஏய் அழகுப் பேயே கோலம் போடுவதை நிறுத்து என்றேன்.ஏன் என்ற கேள்வியை கண்களில் காட்டியபடியே எழுந்து நின்றாய்.எத்தனை முறை நாம் பூமியிலிருந்து வின்மீன்களை ரசித்திருக்கின்றோம்,இன்று பூமியின் வின்மீன்களை அவை ரசிக்கட்டுமென கூறினேன்.ச்சீ இவ்வளவு தானா நான் பயந்து போய்விட்டேன்.சரிசரி நீங்க உள்ள போங்க நான் கோலத்தை முடிச்சிட்டு வந்துடறேன் என்றாய் கெஞ்சலாய்.ஆனால் உன்னை கோலத்தை முடிக்க விடாமல் உள்ளே இழுத்து வந்துவிட்டேன்.நம்மைப் பார்த்து விடிவள்ளி சிரித்துக்கொண்டிருந்ததுவெறும் புள்ளிகளுடன் வாசலில் இருக்கும் கோலத்தைக் கண்டு கேள்விக் கேட்போரிடமெல்லாம் எல்லாம் என் கணவர் செய்த கோலமென செல்ல கோபத்துடன் புலம்பிக் கொண்டிருந்தாய்.நம்முடைய காதலைப் பார்த்து அக்கம்பக்கத்தில் வியந்து போனார்கள்.

காதல்,love,உரைநடைக் கவிதை

தூக்கம்

உடல் சாரா கவிதைகள்- தூக்கம்

கவலைகள் இல்லாமல்
கற்பனைகள் குறையாமல்
கனவுபல கண்டு
இன்பமையாய் தூங்கினேன்
கருவரையில் சிசுவாக

ஏனோ பிறந்தபின்
படித்து உழைத்து
பண்பாய் வாழ்ந்து
பலமுறை தூங்கினாலும்

இன்பமாய் பலநாள்பின்
இன்றுதான் தூங்குகிறேன்
கல்லறையில் பிணமாக.

நானும் மனிதன்

உடல் சாரா கவிதைகள்- நானும் மனிதன்

பிச்சைகாரனுக்கு சில்லரை
போடும் போதும்
விபத்தில் அடிப்பட்டவனுக்கு
உதவும் போதும்
வயதானவர்களுக்கு பேருந்தில்
இடம்கொடுக்கும் போதும்
துயரத்திலிருக்கும் நண்பனுக்கு
ஆறுதல்கூறம் போதும்
வெட்டப்படும் ஆட்டிற்காக
இரக்கப்படும் போதும்
உணர்ந்து கொள்கிறேன்
எனக்குள்ளும் மனிதன்
இருக்கிறான் என்பதனை.

உடல் சாரா கவிதைகள்

எனக்கு பெண்களின் உடலைப் பற்றி கவிதை எழுதுதலில் சற்று ஆர்வம் நிறைந்திருக்கின்றது.இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்துபோல கவிதை எழுத ஆசை.(நான் காதல் கவிதைகளையும் பெண்ணுடல் பற்றி எழுதுவதும் என் பிடிக்காது.)சற்று கஸ்டப்பட்டு நான் எழுதிய கவிதைகள் தான் இவை.சில கவிதைகளை புரிந்துக் கொள்ள உங்களுக்கு சிரமாக இருக்கும்.அந்த கவிதைகளை பல முறை படிக்க வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.இருந்தாலும் எல்லா கவிதைகளையும் எளிய முறைப்படுத்த சற்று முயற்சி எடுத்திருக்கிறேன்.இந்த உடல் சாரா கவிதைகள் தொகுப்புகள் போல வெளிவந்து கொண்டே இருக்கும்.வளர்ந்து வருபவன் என்பதால் பிழைகளை பொறுத்தருளுங்கள் நண்பர்களே.

புத்தம் புதியதான
ஓர் சிந்தனையை
பகிர்ந்து கொண்டிருந்தேன்
யாரோ ஒருவர் சொன்னவைதான்
இதென்றான் நண்பன்
ஆம் நண்பா சென்றபிறவியில்
நான் சொன்னவைதான் அவையென்றேன்
நம்ப மறுத்து சென்றுவிட்டான்
நீங்கள் சொல்லுங்கள் உண்மையென்று

மழை வரும் போது
குடைதேடி ஓடுபவர்களை பார்த்தால்
சிரிப்பு வருகிறது எனக்கு
நான் மழையின் ரசிகன் என்பதால்

ஒவ்வொறு மூழ்கும்
எறும்பிற்கும் ஒருஇலை
போடப் படுகின்றது
எங்கோ இருக்கும்
புறாவிடமிருந்து.
நீங்கள் எறும்பாக இருந்தால்
இலைக் கேளுங்கள்
புறாவாக இருந்தால்
இலையைப் போடுங்கள்

நாளை நடக்கவிருக்கும்
விருந்திற்கு எல்லோரும்
தயாராகிக் கொண்டிருக்கின்றனர்
நன்றாக மெய்ந்துகொண்டிருக்கிறது ஆடும்
நாளை பலியாவதை அறியாமல்

பனி உருகி
நதியாக மாறி
கிளைகள் பிரித்து
கடலில் கலக்கும்
நிகழ்வுகளுக்கு நடுவே
என்கால் நனைத்து போகிறது.

நட்சத்திரங்களும் நிலவும்
இல்லாமல் போன
வெற்று வானத்தை
பார்த்து ரசிக்க முடியவில்லை
யாரேனும் வரைவதற்கு தெரிந்தால்
வரைந்து விடுங்களேன் சூரியனோடு

புலம் பெயரும் பறவைகள்

பறவைகளின் வீடுகளெல்லாம்
நம்வீடாகி ஆகிவிட்டன
நாட்கள் பல

காக்கையை மட்டுமே
பார்த்திருக் கின்றார்கள்
நம்நகர குழந்தைகள்

அழிந்துவரும் உயினங்களின்
பட்டியலில் சேர்த்துவிட்டு
அமைதியாக இருந்துவிடுகிறோம்

அடுத்த தலைமுறைக்கு
நாம் விட்டுசெல்லும்
உலகில் எதுவுமில்லை

குயில்கள் கூவுவதையும்
மயில்கள் ஆடுவதையும்
காணப்போவதில்லை நம்தலைமுறைகள்

புலம்பெயரும் பறவைகளின்
வசதிக்காக தீபாவளியையே
புறக்கணிக்கும் மக்களுமுள்ளனர்

நான் எதிர்பார்பதெல்லாம்
உயிர்களுக்கு தீங்களிக்காத
ஒப்பற்ற சமூகத்தை

தலைவர்களின் சிலைகளில்
எச்சங்களாய் மிச்சமிருக்கின்ற
பறவைகளையாவது காப்பாற்றுவோம்.

நண்பர்களுக்காக ஒரு கவிதை



இந்த கவிதை என்னுடைய நண்பர்களுக்காக எழுதப்பட்டது.நான் அதிகம் காதல் கவிதைகளைப் பற்றிதான் எழுதுவேன்.ஆனால் இந்த முறை சற்று மாற்றம் ஏற்படக் காரணம்,எங்களுடைய பிரிவு.பி.டெக் படிப்பு இந்த வருடத்தோடு முடிகின்றது.நான்கு வருடம் பழகிய நண்பர்களை விட்டு பிரிந்து செல்வது மிகுந்த மன வேதனையை தருகின்றது.இருந்தாலும் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப புரட்சியில் பிரிவு சற்றுதான் பாதிக்கப் போகின்றது.அதை தான் கவிதையாக எழுதியுள்ளேன்.உங்களுடைய கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

கல்லூரியின் முதல் நாளில்
புன்னகைப் பூச்செண்டுகளைப் பரிமாறி
அறிமுகம் செய்து தொடங்கினோம்
அற்புதமான நட்பென்னும் பயணத்தை!

இன்பமோ துன்பமோ எதுவந்தாலும்
ஒன்றாக அதனை சந்தித்தோம்!
ஒருவருடைய வளர்ச்சி பற்றி
மற்றொருவர் தானே சிந்தித்தோம்!

என்னுள்ளும் இருக்கிறது திறனென
எனக்கு ஊக்கம் கொடுத்து
சாதாரண மனிதனாய் இருந்தவனை
சாதனை மனிதனாய் மாற்றினீர்கள்!

முன்பெல்லாம் என்பேனா கசிந்தால்
கரையாகிடும் வெற்று காகிதங்கள்!-ஆனால்
இப்பொழுதெல்லாம் என்பேனா கசிந்தால்
கவிதையாகின்றன அதே காகிதங்கள்!

உணவு உடை உள்ளமென
எல்லாம் பகிர்ந்து கொண்டு
ஒருதாய் பிள்ளைகளாய் நாமிருக்கும்போது
வருகிறது பிரிவென்னும் பெருஞ்சக்தி!

கணினி மாணவர்களாய் இருந்துகொண்டு
பிரிவைப்பற்றி புலம்புதலில் அர்த்தமில்லை!
உலகையே இணைக்கும் இணையத்தில்
நம்மையும் இணைத்துக்கொண்டால் வருத்தமில்லை!

தலைப்பில்லா கவிதைகள்

காதல் பொங்கிவழியும் இந்தக் கவிதைகளை தலைப்பின் மூலம் சிறை வைக்க மனமில்லை.தலைப்பில்லாமல் சிறகசைக்கும் கவிதைகளை சுகந்திரக் கவிதைகளாக உணருகின்றேன்.வெறும் காதல் மட்டுமே இதன் கரு.

ஊரே வாயாடியென
அழைக்கும் என்னை
ஊமையாக மாற்றுவது
நீ மட்டும்தான்

உன் சேலையுடன் விளையாட
காத்துக் கொண்டிருக்கின்றது காற்று
சொறுகிவைத்திருக்கும் முந்தானையை எடுத்துவிடு
பாவம் எவ்வளவு நேரம்
அது காத்துக் கொண்டிருக்கும்

உன்னைப்பற்றிய சிந்தனையிலேயே
சர்வசதா காலமும்
நான் இருப்பதை
தியானம் என்கின்றனர்
புரியாதவர்கள்.

உன்னுடைய அன்னைக்கு பிறகு
என் காதல்தான் சுமந்துவருகிறது
உன்னை.


நான் பார்ப்பதற்கு
கொடுரமாக இருக்கிறேன்
என்பதற்காக என்னை ஒதுக்கிவிடாதே
கடுமையான சிப்பிக்குள்தான்
மென்மையான முத்திருக்கும்
என்பதை மறந்து விடாதே


உன்னைப் பார்ததிலிருந்து
என்னை மறந்துபோனேன் நான்
யாராவது என்னைப்பற்றி கேட்டால்
எதுவும் தெரியவில்லை எனக்கு
உன்னைப் பற்றி உளறிவிட்டு
நகர்ந்துவிடுகின்றேன்.

என் விழிகளுக்கென்ன
வாஸ்துவா இருக்கின்றது
இடம் பார்த்து உரசிப்போக.

தேவதைகள் வசிக்கும் ஊரில்
பிறந்துவிட்ட பாவச்சிறுவன் நான்
அவர்களிடையே வாழும்போது
கட்டிக்காப்பற்றிய இதயத்தை
உன்னிடம் கொடுத்துவிட்டு
என்னுடைய ஊருக்கு
திரும்பிக் கொண்டிருக்கிறேன்
இதயம் இல்லாதவனாய்.

உன்னுடைய நிர்வாணம்கூட
பாதிக்காது என்னை
ஆனால் இப்பொழுது
உன்கென்டைக்கால் கூட
மோகமூட்டுகின்றது
காதலுக்கும் காமத்திற்கும்
ஒருநூல் அளவே
இடைவெளி என்பது
உனக்கு தெரியாமலா இருக்கும்.

நாத்திகனாக இருந்தவனை
நீ வெள்ளிக் கிழமைகளில்
கோவிலுக்கு செல்கிறாய்
என்ற காரணத்திற்காக
ஆத்திகனாக மாற்றியது
காதல் தான்

நான் காதல் தேவதையால்
கவிதை எழுதுவதற்காக அனுப்பட்டவன்
ஒருவேளை நீங்கள் அனுப்பட்டிருக்கலாம்
காதல் செய்வதற்கு மட்டும்

அன்னை மாதவிக்காக

புரட்சி துறவியொருவன்
படைத்திட்ட பாவையடி !
மிரட்சி நீங்காமல்
பார்வைகள் நிற்குதடி !

கற்புக்கரசி கண்ணகியென
கத்துக்குட்டிகள் பிதற்றுதடி !
கண்ணகி கற்புள்ளவள்தான்
கற்புக்கரசி நீதானடி !

உயர்குலத்தில் பிறந்துவளர்ந்து
உயிர்கற்பு காத்த்தில் !
வியப்பொன்றும் இல்லை
விந்தையொன்றும் இல்லை !

பரத்தையர்குலத்தில் பிறந்துவளர்ந்து
பத்தினியாய் நீபோராடியதில்தான்
இருக்கிறது சிறப்பு !
இதற்கில்லை மறுப்பு !

உடல்விற்கும் சந்தைதனில்
உள்ளம்விற்ற மங்கைநீ !
கவலைகள் பலவிருந்தும்
கலைகள்கற்ற கங்கைநீ !

கண்ணகி கற்புடையவள்தான்
காதலுற்ற பெண்ணில்லை !
கணவனை வழிபட்டவள்தான்
அவன்மீது விழியிடவில்லை !

எரித்தாள் கொற்றவனை
ஏற்றமிகு மதுரையுடன் !
தடம்தவறி சென்றவனை
தடுக்கவில்லை காதலுடன் !

மனையில் காட்டாவீரம்
மதுரையில் காட்டியென்னபயன் !
உரியவனுக்கு காட்டாகாதல்
ஊருக்கு காட்டியென்னபயன் !

மன்னித்துவிடு அன்னையே
மாண்பில்லை உன்னவனுக்கு !
இருவிடத்தும் உள்ளகாதல்
தெரியவில்லை தென்னவனுக்கு !

மணிமேகலையை பெற்றதனால்
மனம்கமழும் உன்பொற்பை !
போராடிப் பெற்றதனால்
பார்புகழும் உன்கற்பை !

இல்லறம் துறந்து
பூண்டாய் காவி !
தர்மத்தால் உலகை
ஆண்டாய் தேவி !
- அன்புடன் ஜகதீஸ்வரன்