திங்கள், 27 ஜூலை, 2009
புதன், 22 ஜூலை, 2009
பாவம் ரோஜாக்கள்
சொளக்காட்டு பொம்மை
ஹிட்லர்
காதல் கனி
வியாழன், 16 ஜூலை, 2009
ஆதரவு தாருங்கள்
வள்ளல்கள்
தத்தளிக்கும் முல்லைக் கொடிக்கு
தடி கொடுத்தால் போதாதா?
தமிழ்பாடும் கிழவிக்கு
தங்ககிலி கொடுத்தால் போதாதா?
காயம் பட்ட புறாவுக்கு
காலில் மருந்திட்டால் போதாதா?
மயில் ஆடும் அழகை
மதிநிறைய் ரசித்தால் போதாதா?
அறிவுகொண்டு ஆராய்ந்து கொடுக்க
அவகாசம் இல்லாமல் போனதற்கு
அன்புதான் காரணம் என்கின்றனர்
அனைத்தும் உணர்ந்தவர்கள்!
அதனால் தான்
மயிலுக்கு துணி! முல்லைக்கு தேர்!
ஔவைக்கு கனி! பறவைக்கு தசை!
வள்ளல்கள் கதைகளில்
வற்றாது நிறைந்திருக்கிறது
நகைச்சுவை நிகழ்வுகள்!
சனி, 11 ஜூலை, 2009
சட்டம் ஒரு ஆமை
நான் கவிதைப் பிழியப்பட்ட காகிதம்
வெள்ளி, 10 ஜூலை, 2009
ராமர் பாலம்
வேண்டியதெல்லாம்
எம் தமிழ்மக்கள்
சொர்கத்திற்கு வரும்போது
மேளங்களின் தாளங்கள் வேண்டாம்!
அது அவர்களுக்கு
வெடிகுண்டுகளை ஞாபகம் செய்யக்கூடும்!
நாதசுரங்களின் நாதங்கள் வேண்டாம்
அது அவர்களுக்கு
துப்பாக்கிகளை ஞாபகம் செய்யக்கூடும்!
இன்னும் அங்கிருக்கும்
கற்பக விருச்சமோ காமதேனுவோ,
சோமபானமோ சொக்கும் நடனமோ,
எதுவும் வேண்டியதில்லை!
அவர்களுக்கு வேண்டியதெல்லாம்
இங்கு கிடைக்காத அமைதி மட்டுமே!