பசுமை நிறைந்த காட்டை
பகையென நினைத்து வெட்டினோம்
வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய்
வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்
வீட்டின் கொல்லையில் கத்தும்
கிளியை துரத்திவிட்டு
தொலைக்காட்சியில் தொலைந்து போனோம்
நம் குழந்தைகள்
செல் தீர்ந்து போன
பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்
தனிமையாய்!.
- சகோதரன் ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/