ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

திங்கள், 10 மே, 2010

இயற்கை வரம்




பசுமை நிறைந்த காட்டை

பகையென நினைத்து வெட்டினோம்

வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய்

வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்

வீட்டின் கொல்லையில் கத்தும்

கிளியை துரத்திவிட்டு

தொலைக்காட்சியில் தொலைந்து போனோம்

நம் குழந்தைகள்

செல் தீர்ந்து போன

பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்

தனிமையாய்!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/

அன்னை எவருக்கும் அன்னைதான்



குரங்கென்றாலும்

குழந்தையென்றாலும்

பசியென அழுதால்

பாராட்டி சீராட்டி

பாலூட்டும் அன்னை போல்

பாசம் காட்ட

யாரால் இயலும்!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

உயிருனும் உயர்ந்தது ஒழுக்கம்




ஒவ்வொரு நாளும்

ஒழுக்கம் என்பதன் இலக்கணம்

மாறப் படுகிறது!

மீறப் படுகிறது!!

நாளை எவரேனும் முன்வரலாம்

திருக்குறளில் ஒழுக்கத்தின் குறள்களை நீக்குவதற்கு!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

திங்கள், 3 மே, 2010

அமிலக் காதல்



காதலித்து விட்டு

ஏமாற்றும் பெண்களை

கடவுள் தண்டிப்பதில்லை!

கடமையென சட்டமும் தண்டிப்பதில்லை!

ஏமாந்த ஆண்களின்

நினைவாக இருக்கின்றன

அமிலத்தில் கரைந்து போன

பெண்ணின் முகங்கள்!.

(காதலிப்பதாக சொல்லி ஒரு ஆண் ஏமாற்றினால், பெண் முறையிட இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆணை பெண் ஏமாற்றினால் இங்கு அவனுக்கு துணையாக எதுவும் இல்லை. எனவே பல இளைஞர்கள் ஆயுதமாக அமிலத்தை எடுக்கின்றார்கள்.)

மயிலிறகு சொல்லும் கதை






குட்டிப் போடுமென

குழந்தை தனமாகவோ!

விட்டுப் போன

காதலியின் நினைவாகவோ!

சுட்டுத் தந்த

நண்பனின் நினைவாகவே!

எல்லோரிடமும் இருக்கிறது

ஒரு குட்டி மயிலிறகு

கதைகளைச் சொல்லி மகிழ்ந்த படி!

பித்தனின் தேடல்



நெடுநேரமாய்

அவன் தேடிக் கொண்டிருந்தான்!

கடந்து செல்பவர்களிடமும் அவன் தேடல் இருந்தது

கீழே கிடப்பைவைகல் மீதும் அவன் தேடல் இருந்தது

தயங்கி தயங்கி

எதைத் தேடுகிறாய் என கேட்டேன்!


தன்னை தேடிக் கொண்டிருப்பதாக அவன் சொன்னான்!

நானும் தேடினேன் என்னை!

முதுமை வலி



மார் மீதும்

தோழ் மீதும்

போட்டு வளர்த்த மகள்

தன் மலம் அள்ளிப் போகும் போது

"இறைவா சாகும் வரம் கொடு"வென

படுக்கையில் இருக்கும் முதியவர் வேண்டுகிறார்.

"இறைவா இன்னும் பணிசெய்ய வரம் கொடு"வென

மகள் வேண்டுகிறாள்.

கடவுள் செய்வது புரியாது இருக்கிறான்,

என்னைப் போல!