சனி, 23 அக்டோபர், 2010
வியாழன், 21 அக்டோபர், 2010
அம்மனும் தீட்டு
அனைவரும் அர்ச்சகராகலாமென
சட்டம் கொண்டுவந்தும்
சத்தமில்லை இங்கு!
மூன்று நாள் வெளியேற்றப்படும்
உடல் அசுத்தங்கள்
அவளை அசுத்தமாக்கிவிட்டதாம்!
அறிவியல் சொல்கிறது
மாதவிடாயால் பெண்
தூய்மையாகின்றாளென்று!
அர்ச்சகர் சொல்கிறார்
அதனால் அவள்
அசுத்தமாகிவிட்டாளென்று!
நீயும் பெண்ணல்லவா தாயே
நீயே சொல்,...
அந்த நாட்களில்
அவர்கள் சொல்லும் தீட்டுடன்
கருவறையில் அமர்ந்திருப்பதை!
புதன், 13 அக்டோபர், 2010
பிச்சைக்காரன்
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
எப்படி மாறியது
உலகிற்கே கணிதத்தினை தந்தவர்கள் இந்தியர்கள்
என்று அறிஞர்களெல்லாம் சொல்லுகிறார்கள்
ஆனால்
கணக்கு எனக்கு வர மாட்டேங்குதென
சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!.
இதற்கு பெயர்தான் முரனோ!.
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
அன்னையானவள்
அரவனைத்து இருக்கவேண்டிய அன்னை
அடுத்தவேளை உணவுக்காக போராடுகையில்
இவள் அன்னையாக மாறிவிட்டாள்
தன்னுடைய சகோதரனுக்காக!...
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
சனி, 21 ஆகஸ்ட், 2010
அவர்களுக்கும்,...
AM 3:23
2 comments
செவ்வாய், 27 ஜூலை, 2010
கள்ளக் காதல்
வியாழன், 22 ஜூலை, 2010
கோவில் குரங்கு!
சனி, 10 ஜூலை, 2010
கொலை செய்யும் ஆசிரியர்கள்
திங்கள், 21 ஜூன், 2010
இங்கு சிறுநீர் கழிக்காதே!
ஞாயிறு, 20 ஜூன், 2010
உண்மைத் தொண்டர்கள்
ஆண்டவன்
வெள்ளி, 11 ஜூன், 2010
உறவுகள்
அம்மாவின் அழுகுரல்,
உறவுகளின் கதரல் என ஒட்டுமொத்த சோகத்தையும்
ஒருசேர அழைத்துக் கொண்டு
தாத்தாவின் இறுதிபயணத்திற்காக பயணப்படுகிறன்.
வழியில்…
யாரென அறியாவிட்டாலும்
பாசமுடன் கையசைக்கின்ற
தெருவோரக் குழந்தைக்கு
பதிலுக்கு கையசைக்கின்ற போது
புரிகிறது…
ஒவ்வொருவரும் உறவுகளே என!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
அருமை அப்பா
திங்கள், 10 மே, 2010
இயற்கை வரம்
பசுமை நிறைந்த காட்டை
பகையென நினைத்து வெட்டினோம்
வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய்
வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்
வீட்டின் கொல்லையில் கத்தும்
கிளியை துரத்திவிட்டு
தொலைக்காட்சியில் தொலைந்து போனோம்
நம் குழந்தைகள்
செல் தீர்ந்து போன
பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்
தனிமையாய்!.
- சகோதரன் ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/
அன்னை எவருக்கும் அன்னைதான்
உயிருனும் உயர்ந்தது ஒழுக்கம்
திங்கள், 3 மே, 2010
அமிலக் காதல்
காதலித்து விட்டு
ஏமாற்றும் பெண்களை
கடவுள் தண்டிப்பதில்லை!
கடமையென சட்டமும் தண்டிப்பதில்லை!
ஏமாந்த ஆண்களின்
நினைவாக இருக்கின்றன
அமிலத்தில் கரைந்து போன
பெண்ணின் முகங்கள்!.
(காதலிப்பதாக சொல்லி ஒரு ஆண் ஏமாற்றினால், பெண் முறையிட இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆணை பெண் ஏமாற்றினால் இங்கு அவனுக்கு துணையாக எதுவும் இல்லை. எனவே பல இளைஞர்கள் ஆயுதமாக அமிலத்தை எடுக்கின்றார்கள்.)
மயிலிறகு சொல்லும் கதை
பித்தனின் தேடல்
முதுமை வலி
புதன், 28 ஏப்ரல், 2010
அழகான கடவுள்
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
தடுத்தாட்கொண்டவன்
வருங்கால தமிழகமே
மனித பட்டாம்பூச்சி
இரவுப் பெண்
சுமை தாங்கி
பார்க்கும் பொழுதெல்லாம்
நெஞ்சம் கணக்கிறது
அதன் பின்னால் இருக்கும்
கதையை எண்ணி!.
(சுமைதாங்கிகளை அமைப்பதில் ஒரு குறியீட்டுத் தன்மை கொண்ட அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கு என்பது நம்பிக்கை.)
ஆச்சிரியம்
நவீனப் பெண்
சிலுவை
வெள்ளி, 26 மார்ச், 2010
இரவுப் பெண்