காமம்
குறிப்பு -
காதல் போல காமமும் ஒரு உணர்ச்சிதான்.வள்ளுவனே பாட்டெழுதி அங்கிகாரம் கொடுத்துவிட்டான்.அதன்பிறகு நமக்கேன் தயக்கம்.
தொடர்வோம்.
கவிதைகள்
காகித மேனியில்
பேனா மைவிந்து
செய்திட்ட புணர்ச்சியால்
பிறந்திட்ட குழந்தைகள் !
சேர்
நேற்று பெய்த மழையில்
தெருவெங்கும் சிறுசிறு குளங்கள்
நீமுன்னும் நான்பின்னுமாய் செல்கிறோம்
சேராக கூடாதென
உன்ஆடை மேல்செல்ல
சேரானது என்னவோ என்மனதுதான் !
உண்மை
கவிதை எழுதியே
காமம் தீர்க்கின்றேனென
கடுஞ்சொல் பேசுகிறாய் !
காமம் தீர்க்க
கவிதை வேண்டாம்
கையே போதும் !
வசதி
இரவுஉடை அணிந்திருந்தாய்
உந்தன் வசதிக்காக
எனக்கும் அது வசதியாகவே இருந்தது !
மிருகம்
கொஞ்சிச் சென்றவள்
அஞ்சிச் செல்லும்போது
அறிந்து கொள்கிறேன்
நான் ஆணென்பதை !
வரதட்சனை
ஒரு பெண்ணிடம்
பொருள் கொடுத்து
காமம் நடந்தால்
அது விபச்சாரம்
ஒரு பெண்ணிடம்
பொருள் பெற்று
காமம் நடப்பின்
அது சம்சாரம்
பெருளுடைய காமம்
உணர்வுகள் அற்றது
பொருளற்ற காமம்
உணர்வுகள் உடையது
வரதட்சனை என்ற
பெறும்பொருள் பெற்று
காமம் பெறுகின்றவர்களும்
விபச்சா ரன்கள்தான்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!