செவ்வாய், 17 பிப்ரவரி, 2009
காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்
தந்துவிடு
ஆடையின்றி அம்மனமாய்
அலைகிறது என்காதல்
உடுத்துக்கொள்ள தந்துவிடு
உந்தன் காதலை !
தேடுதல் வேட்டை
பிறந்த இடம் தேடி
அலைந்து கொண்டிருக்கிறது
என் காதல் !
கவிதை
காதல் கவிதையொன்று
எழுதச் சொன்னான்
அவன் காதலிக்காக
என் நண்பன் !
எழுதிய கவிதையை
படித்து விட்டு
அற்புதமாக இருப்பதாக
பாராட்டி தீர்த்தான் !
இருக்காத பின்னே
உன்னை நினைத்து
எழுதியதல்லவா அக்கவிதை !
காதல்கரு
என்மனதின் மகரதப்பொடிகளை
சுமந்த வண்டுகள்
எப்பொழுது வேண்டுமானாலும்
உன்னிடம் வரலாம்
தயாராய் இரு
காதல்கரு தரிப்பதற்கு !
தந்துவிடு
ஆடையின்றி அம்மனமாய்
அலைகிறது என்காதல்
உடுத்துக்கொள்ள தந்துவிடு
உந்தன் காதலை !
தேடுதல் வேட்டை
பிறந்த இடம் தேடி
அலைந்து கொண்டிருக்கிறது
என் காதல் !
கவிதை
காதல் கவிதையொன்று
எழுதச் சொன்னான்
அவன் காதலிக்காக
என் நண்பன் !
எழுதிய கவிதையை
படித்து விட்டு
அற்புதமாக இருப்பதாக
பாராட்டி தீர்த்தான் !
இருக்காத பின்னே
உன்னை நினைத்து
எழுதியதல்லவா அக்கவிதை !
காதல்கரு
என்மனதின் மகரதப்பொடிகளை
சுமந்த வண்டுகள்
எப்பொழுது வேண்டுமானாலும்
உன்னிடம் வரலாம்
தயாராய் இரு
காதல்கரு தரிப்பதற்கு !
வெள்ளி, 6 பிப்ரவரி, 2009
காதல் தேவதைக்கு
காதல் தேவதைக்கு
இது காதல் மாதம்.மதங்களையும் மொழிகளையும் தாண்டி மனங்களை இணைக்கும் மாதம்.மனிதனை கடவுளாக மாற்றும் மாதம்.அன்பு என்றொரு அச்சாணி கொண்டு மனிதத்தையே சுழலச் செய்யும் மாதம்.
உலக அளவில் காதலின் புனிதம் அறியப்பட்டிருக்கும் நிலையில் காதலர்கள் என்ற பசு போர்வைக்குள் இருக்கும் காமப் புலிகளை கண்டுப்பிடித்து தண்டிக்க வேண்டியதும் நம்முடைய கடமைதான்.
உண்மைக் காதலைப் போற்றுவோம்.உலகத்தை உய்விப்போம்.
என்னுடைய கவிதைகளைப் படித்து என் காதலை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு கனவு காதலிகளை தந்து கவிதை எழுத உதவிய காதல் தேவதைக்கு இந்த கவிதைகள் சமர்ப்பனம்.
காதல் கவிதைகள் மட்டுமல்ல
காதல் செய்பவர்களும் அழகுதான்.
இது காதல் மாதம்.மதங்களையும் மொழிகளையும் தாண்டி மனங்களை இணைக்கும் மாதம்.மனிதனை கடவுளாக மாற்றும் மாதம்.அன்பு என்றொரு அச்சாணி கொண்டு மனிதத்தையே சுழலச் செய்யும் மாதம்.
உலக அளவில் காதலின் புனிதம் அறியப்பட்டிருக்கும் நிலையில் காதலர்கள் என்ற பசு போர்வைக்குள் இருக்கும் காமப் புலிகளை கண்டுப்பிடித்து தண்டிக்க வேண்டியதும் நம்முடைய கடமைதான்.
உண்மைக் காதலைப் போற்றுவோம்.உலகத்தை உய்விப்போம்.
என்னுடைய கவிதைகளைப் படித்து என் காதலை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு கனவு காதலிகளை தந்து கவிதை எழுத உதவிய காதல் தேவதைக்கு இந்த கவிதைகள் சமர்ப்பனம்.
காதல் கவிதைகள் மட்டுமல்ல
காதல் செய்பவர்களும் அழகுதான்.
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009
வீர வணக்கம் !!!
நண்பனுக்காக என்றொரு கவிதையை எழுதியிருந்தேன்.முத்துகுமார் தன் உயிரை தியாகம் செய்யும் முன்பே.அதை சற்று திருத்தி தற்போது வெளியிட்டு அந்த தியாகிக்கு வீர வணக்கம் செய்கிறேன்.
செந் தீயால்
சாவை சந்தித்தாய்
பாவப்பட்ட மக்களான
பச்சை தமிழினத்துக்காக
தலைமுறைகள் சில
தடம்தெரியாமல் போனபின்னும்
மாற்றங்கள் என்றெதுவும்
மாறவில்லை நண்பா
சொந்தமண்ணில் கால்பதித்தால்
சொந்தமில்லாமல் போய்விடுகின்றது
கன்னிவெடியில் சிக்கி
கைகளும் கால்களும்
உயிருக்கு பயந்து
நாடுகடந்து போனாலும்
வாழ்வதற்கொரு வழி
எங்குமில்லை நண்பா
தாய்மண்ணை காக்கா
கூட்டம் உயிர்விடும்போது
உயிரைக் காக்க
விட்டிருக்கிறோம் தாய்மண்ணையே
எங்களிடம் மிச்சமிருப்பதெல்லாம்
இறந்தவர்களின் நினைவுகளும்
இருப்பவர்களின் கனவுகளும்
மட்டுமே நண்பா
ஈழம் பற்றிய சிந்தனைக்கு fortruetamilan.blogspot.com க்கு செல்லுங்கள்.
வீர வணக்கம் வீர வணக்கம்!!!