என்உள்ளம் மயக்கும் அளவிற்கு
எதுவும் அழகில்லை என
கால்கடுக்க அலைந்துவிட்டு
புலம்பிக்கொண்டிருக்கிறேன் நான்
கடவுளிருக்கும் கோவில்களும்
கட்சிகளிருக்கும் கலகங்களும்
வானுயர்ந்த கட்டிடங்களும்
வரலாறுபடைத்திட்ட சிலைகளும்
நாகரீக எச்சங்களாய் தெரிகின்றன
கடற்கரை மணலோடு
குப்பைகளாய் காதலர்கள்
எல்லாம்தாண்டி நிர்வாணியாக
இருக்கிறாள் வங்கக்கடல்
காவேரி மைந்தனின்
கவலையை போக்க!