செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

தந்துவிடு

ஆடையின்றி அம்மனமாய்
அலைகிறது என்காதல்
உடுத்துக்கொள்ள தந்துவிடு
உந்தன் காதலை !


தேடுதல் வேட்டை

பிறந்த இடம் தேடி
அலைந்து கொண்டிருக்கிறது
என் காதல் !


கவிதை

காதல் கவிதையொன்று
எழுதச் சொன்னான்
அவன் காதலிக்காக
என் நண்பன் !
எழுதிய கவிதையை
படித்து விட்டு
அற்புதமாக இருப்பதாக
பாராட்டி தீர்த்தான் !
இருக்காத பின்னே
உன்னை நினைத்து
எழுதியதல்லவா அக்கவிதை !



காதல்கரு

என்மனதின் மகரதப்பொடிகளை
சுமந்த வண்டுகள்
எப்பொழுது வேண்டுமானாலும்
உன்னிடம் வரலாம்
தயாராய் இரு
காதல்கரு தரிப்பதற்கு !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!