வெள்ளி, 11 ஜூன், 2010

உறவுகள்





அம்மாவின் அழுகுரல்,

உறவுகளின் கதரல் என ஒட்டுமொத்த சோகத்தையும்

ஒருசேர அழைத்துக் கொண்டு

தாத்தாவின் இறுதிபயணத்திற்காக பயணப்படுகிறன்.

வழியில்…

யாரென அறியாவிட்டாலும்

பாசமுடன் கையசைக்கின்ற

தெருவோரக் குழந்தைக்கு

பதிலுக்கு கையசைக்கின்ற போது

புரிகிறது…

ஒவ்வொருவரும் உறவுகளே என!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!