வியாழன், 21 அக்டோபர், 2010

அம்மனும் தீட்டு



அனைவரும் அர்ச்சகராகலாமென
சட்டம் கொண்டுவந்தும்
சத்தமில்லை இங்கு!

மூன்று நாள் வெளியேற்றப்படும்
உடல் அசுத்தங்கள்
அவளை அசுத்தமாக்கிவிட்டதாம்!

அறிவியல் சொல்கிறது
மாதவிடாயால் பெண்
தூய்மையாகின்றாளென்று!

அர்ச்சகர் சொல்கிறார்
அதனால் அவள்
அசுத்தமாகிவிட்டாளென்று!

நீயும் பெண்ணல்லவா தாயே
நீயே சொல்,...

அந்த நாட்களில்
அவர்கள் சொல்லும் தீட்டுடன்
கருவறையில் அமர்ந்திருப்பதை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!