செவ்வாய், 3 நவம்பர், 2009

பட்டாம்பூச்சி



நண்பர்களுடன் சேர்ந்து
பறக்கும் தும்பியை பிடித்து
அதன் வாலில் நூல்கட்டி
காற்று இல்லாமல் பறக்கும்
காற்றாடியை கண்டறிந்தவன் போல
கர்வத்துடன் வீடுசென்று காண்பிக்கையில்
உயிரை வதைத்து ரசிக்கிறான் உன்மகனென
அப்பா கொடுத்த அறையில்
கண்ணம் சிவக்க நான் அழுதபோது
கலங்கலான என் கண்களில் தெரிந்தது
நேற்று பிடிக்கையில் தவறிப்போன
பட்டாம்பூச்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!