தார்கொதிக்கும் ரோட்டுல
தவிச்சுநான் வாரேயில
மிதிவண்டி கைபுடிச்சு
ஏன்புள்ள நடந்துவாரன்னு
எதிர்வந்து நீ கேட்க
அப்பன் வண்டில
நடுவுல இருக்கிற கம்பில
பாவாடை தேக்கிகொள்ள
பாவி மனுசனுங்க பார்வைதப்ப
நடந்துவரத நான் சொல்ல
இதெல்லாம் ஒரு சேதியான்னு
வெரசா வெல்டிங் கடையில
நடுகம்பி நீக்கி கொடுத்து
நெஞ்சில எடம் புடிச்ச
பொம்பள மனசறிஞ்சு
கஷ்டம் தீர்த்துபோரவனே
கடவுளுன்னு நான் சொன்னேன்
கணவன்னு கடவுள் சொன்னான்
செவ்வாய், 3 நவம்பர், 2009
காதல் கவிதை
11:47 AM
No comments
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!