வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தடுத்தாட்கொண்டவன்



கோவிலுக்குள் நுழையப் போனேன்
அமர்ந்திருந்தவன் தடுத்தான்
“எதற்காகப் போகிறாய்”
“கடவுளைப் பார்க்க”
“கடவுள் அங்கில்லை”
“வேறெங்கே”
தட்டை நீட்டினான்
கடவுளானேன் நான்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!