திங்கள், 10 மே, 2010

இயற்கை வரம்




பசுமை நிறைந்த காட்டை

பகையென நினைத்து வெட்டினோம்

வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய்

வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்

வீட்டின் கொல்லையில் கத்தும்

கிளியை துரத்திவிட்டு

தொலைக்காட்சியில் தொலைந்து போனோம்

நம் குழந்தைகள்

செல் தீர்ந்து போன

பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்

தனிமையாய்!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!