வியாழன், 16 ஏப்ரல், 2009

பெண் எழுதினால்

பெண் எழுதினால்

ஆணாக இருந்து பெண்ணுடலைப் பார்க்கும் போது, அதில் வெளிப்படுகின்ற காமத்தினை தடுக்க இயலவில்லை.அதன் காரணமாய் அவர்களின் வலிகளையும்,வேதனைகளையும் சொல்லுகின்ற இடத்தில் கொஞ்சம் காமமும் சேர்ந்து கவிதையின் கருவையே சிதைத்து விடுகின்றன.ஒரு கவிஞன் அதற்கு சம்மதம் தெரிவிக்கலாமா.கூடாதல்லவா,அதற்கு எனக்கு கிடைத்த தீர்வுதான் என்னை பெண்ணாக பாவித்து கவிதை எழுதும் முறை.

ஒவ்வொரு ஆணும் கருவரையில் சில காலம் பெண்ணாகத்தான் இருக்கின்றனர்.(நன்றி டாக்டர் ஷாலினியின் தமிழில் வலைப்பூ.)அந்த வகையில் பார்த்தால் நானும் பெண்ணாக இருந்திருக்கிறேன்.இப்போதும் நான் பெண்ணாக இருந்திருந்தால் எப்படியென சிந்தித்து சில பெண்ணுடல் சார்ந்த கவிதைகளுக்கு அவர்களாகவே என்னை மாற்றி எழுதியிருக்கிறேன்.

பல பெண் கவிஞர்கள் இருக்கும் போது அவர்களுக்கு இந்த கவிதைகளை விட்டுத் தராமல் எழுதுவது,ஒரு விதத்தில் என்னுடைய சுயநலம்.அதே வேளை அவர்கள் இந்தக் கருத்தையே ஏற்றுக் கொள்ளாமல் கூட இருக்கலாம்.பெண்ணுடலை அவர்களுக்கு சொந்தமானது என போர்க் கொடி உயர்த்தலாம்.இல்லை என் கவிதைகளின் பொருள் புரிந்து பாராட்டும் அளிக்கலாம்.இந்த எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் நான் எழுதிய கவிதைகளை படித்துவிட்டு கருத்துக்களைச் சொல்லுங்கள்.

என் கவிவுலகின் புத்தம் புது முயற்சியாய் வெளிப்பட்டிருக்கும் இதற்கு ஆதாரவுத் தாருங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!