திங்கள், 27 ஜூலை, 2009

குப்பைத் தொட்டி




எவனையோ ஓர் இரவு சுமந்ததில்
என்னை பத்து மாதம் சுமந்தவள்
காமம் தீர்ந்து அவன் போனபின்பு
கருவலேயே கலைக்க முடியாமல்
பெற்றெடுத்து கொடுத்து போயிருக்கிறாள்
குப்பைத் தொட்டிக்கு பிள்ளையாய்

9 கருத்துகள்:

  1. Miga alamana karuthukkal arumaiyana vaira varigal thodranthu padaiyungal.. follower gadget illaiya i wanted to follow you :-)

    Tamil font problem so typing in english nanba

    பதிலளிநீக்கு
  2. ஜகதீஷ்,

    உங்கள் கவிதைகள் எல்லாமே உணர்வுப் பூர்வமாகவும், ஆழ்ந்த பொருட்செறிவு உள்ளவையாகவும் இருக்கின்றன. சோளக்கொல்லை பொம்மை கவிதை சட்டென்று தைத்தது.

    ஹைக்கூக்களும் முயன்று பாருங்களேன்!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. கவிதை கரு சிறப்பாக இருக்கிறது.... கொஞ்சம் வடிவத்தை (சுறுக்கி) மாற்றுங்களேன் (இது என் கருத்துதான்)

    பதிலளிநீக்கு
  4. கருணாகரசு -ன் கருத்தே என் கருத்தும்.

    பதிலளிநீக்கு
  5. //காதல் தீர்ந்து அவன் போனபின்பு///
    என்று சொல்வதைவிட

    காமம் தீர்ந்து அவன் போன பின்பு

    என்று சொல்லியிருந்தால்...?

    காதல் புனிதமானது....

    அருமை
    வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  6. //காமம் தீர்ந்து அவன் போன பின்பு

    என்று சொல்லியிருந்தால்...?//

    சரியே...

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!