வெள்ளி, 20 மார்ச், 2009

புலம் பெயரும் பறவைகள்

பறவைகளின் வீடுகளெல்லாம்
நம்வீடாகி ஆகிவிட்டன
நாட்கள் பல

காக்கையை மட்டுமே
பார்த்திருக் கின்றார்கள்
நம்நகர குழந்தைகள்

அழிந்துவரும் உயினங்களின்
பட்டியலில் சேர்த்துவிட்டு
அமைதியாக இருந்துவிடுகிறோம்

அடுத்த தலைமுறைக்கு
நாம் விட்டுசெல்லும்
உலகில் எதுவுமில்லை

குயில்கள் கூவுவதையும்
மயில்கள் ஆடுவதையும்
காணப்போவதில்லை நம்தலைமுறைகள்

புலம்பெயரும் பறவைகளின்
வசதிக்காக தீபாவளியையே
புறக்கணிக்கும் மக்களுமுள்ளனர்

நான் எதிர்பார்பதெல்லாம்
உயிர்களுக்கு தீங்களிக்காத
ஒப்பற்ற சமூகத்தை

தலைவர்களின் சிலைகளில்
எச்சங்களாய் மிச்சமிருக்கின்ற
பறவைகளையாவது காப்பாற்றுவோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!