நானும் வள்ளல்தான்
நந்துபோன சேலை
ஏழ்மையின் உண்மையை
எனக்குள் விதைக்கின்றது
வெற்று நெற்றி
கணவன் இறந்ததை
கண்களுக்கு சொல்லுகின்றது
கையிலிருக்கும் குழந்தை
பசியின் கொடூரத்தால்
கதறிக் கொண்டிருக்கிறது
அருகில் இருப்பவரெல்லாம்
கருனையோடு காசுபோட
என்னிடம் திரும்புகிறாள்
நானும் அவளுக்கு
சில்லரைகள் போடுவேன்
வேலை கிடைத்தவுடன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!