ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

திங்கள், 23 நவம்பர், 2009

சிங்காரச் சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரில்
என்உள்ளம் மயக்கும் அளவிற்கு
எதுவும் அழகில்லை என
கால்கடுக்க அலைந்துவிட்டு
புலம்பிக்கொண்டிருக்கிறேன் நான்

கடவுளிருக்கும் கோவில்களும்
கட்சிகளிருக்கும் கலகங்களும்
வானுயர்ந்த கட்டிடங்களும்
வரலாறுபடைத்திட்ட சிலைகளும்
நாகரீக எச்சங்களாய் தெரிகின்றன

கடற்கரை மணலோடு
குப்பைகளாய் காதலர்கள்
எல்லாம்தாண்டி நிர்வாணியாக
இருக்கிறாள் வங்கக்கடல்
காவேரி மைந்தனின்
கவலையை போக்க!

வியாழன், 19 நவம்பர், 2009

காதல் கவிதை




ஒற்றை சிவப்பு ரோஜாவை
கையில் வைத்துக் கொண்டு
பூ பிடித்திருக்கின்றதா என்றாய்
ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.
வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!
இல்லை இல்லை
ஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றேன்!

திங்கள், 16 நவம்பர், 2009

காதல் கவிதை



ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்
புதியதாக தொடங்குகிறது
உனக்கான என் காதல்!

செவ்வாய், 10 நவம்பர், 2009

காதல் கவிதை



நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
பேசாமல் போன அந்த நாட்களில்தான்
உன் காதல் அதிகமாக பேசியது
கவிதையாக!

காதல் கவிதை




வெட்கம் சிந்தும் பார்வை
நகை கடிக்கும் பற்கள்
மனதினை மயக்கும் தாவணி
நீ அப்படியே இருக்கிறாய்!
நான்கு வருட நகரவாழ்க்கையில்
நான் தான் மாறிவிட்டேன்!

செவ்வாய், 3 நவம்பர், 2009

படக் கவிதை


இந்தியா



சின்ன வளையத்திற்குள்
உடல் நுழைத்து
வித்தை காட்டி
விருது வாங்கிப் போனாள்
சீனப் பெண் !

கயிற்றின் மீது
பிடியில்லாமல் நடந்து
சாகசம் காட்டி
சாதனையாளனென பட்டம் வாங்கிப்போனாள்
கம்போடியாப் பெண் !

விதவிதமாய் பெண்கள்!
விதவிதமாய் முயற்சிகள் !

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி முடிந்துவிட
தெருவில் நடக்க தொடங்கினேன்
அங்கே
அவர்கள் செய்த அனைத்தையும்
சின்னப் பெண் ஒருத்தி
செய்து காட்ட
‘இப்படி பிச்சையெடுக்கறவங்க இருக்கிறவரைக்கும்
இந்தியா வல்லரசாகாது சார்’
என்றான் ஒருவன்
ஒரு ரூபாயை தூக்கிப் போட்ட உரிமையில் !

காதல் கவிதை



தார்கொதிக்கும் ரோட்டுல
தவிச்சுநான் வாரேயில
மிதிவண்டி கைபுடிச்சு
ஏன்புள்ள நடந்துவாரன்னு
எதிர்வந்து நீ கேட்க

அப்பன் வண்டில
நடுவுல இருக்கிற கம்பில
பாவாடை தேக்கிகொள்ள
பாவி மனுசனுங்க பார்வைதப்ப
நடந்துவரத நான் சொல்ல

இதெல்லாம் ஒரு சேதியான்னு
வெரசா வெல்டிங் கடையில
நடுகம்பி நீக்கி கொடுத்து
நெஞ்சில எடம் புடிச்ச

பொம்பள மனசறிஞ்சு
கஷ்டம் தீர்த்துபோரவனே
கடவுளுன்னு நான் சொன்னேன்
கணவன்னு கடவுள் சொன்னான்

பட்டாம்பூச்சி



நண்பர்களுடன் சேர்ந்து
பறக்கும் தும்பியை பிடித்து
அதன் வாலில் நூல்கட்டி
காற்று இல்லாமல் பறக்கும்
காற்றாடியை கண்டறிந்தவன் போல
கர்வத்துடன் வீடுசென்று காண்பிக்கையில்
உயிரை வதைத்து ரசிக்கிறான் உன்மகனென
அப்பா கொடுத்த அறையில்
கண்ணம் சிவக்க நான் அழுதபோது
கலங்கலான என் கண்களில் தெரிந்தது
நேற்று பிடிக்கையில் தவறிப்போன
பட்டாம்பூச்சி

கேள்வி


தலைநகருக்கு வந்த
தவறுநடந்து மாதம் மூன்றாகிறது
கைப்பேசியில் அழைத்து
நலம் விசாரிக்கும் அன்னையிடம்
வேலை குறித்த புதுபொய்யை சொல்லிவிட்டு
தூங்கப் போகின்றேன்
மனதின் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே.

வியாழன், 29 அக்டோபர், 2009

காதல் கவிதை




முகத்தினை மூடியென்னபயன்
அதான் மொத்த அழகையும்
காட்டிக் கொடுத்துவிட்டதே
உன் கண்கள்

காதல் கவிதை



நீ
சுற்றுகின்ற ஒவ்வொறு முறையும்
தூய்மையாகிக் கொண்டே போகிறது
துளசி!

உடல்சாரா கவிதைகள்




மசக்கையாய் இருந்தபோது
மாங்காய்க்கு வழியின்றி
சாம்பல்தின்று மனம்தேற்றி
குறைபிரசவம் கூடாதேன
கூடவளர்ந்த கெடாயை
குலதெய்வத்திற்கு நேந்துவிட்டு
வலியெடுக்கும் காலம்நோக்கி
வயிற்றை தடவிக்கொண்டிருக்கிறாள்
பத்தாம் வகுப்பறையில்
பள்ளியில் இருக்கவேண்டியவள்

உடல்சாரா கவிதைகள்

மசக்கையாய் இருந்தபோது
மாங்காய்க்கு வழியின்றி
சாம்பல்தின்று மனம்தேற்றி
குறைபிரசவம் கூடாதேன
கூடவளர்ந்த கெடாயை
குலதெய்வத்திற்கு நேந்துவிட்டு
வலியெடுக்கும் காலம்நோக்கி
வயிற்றை தடவிக்கொண்டிருக்கிறாள்
பத்தாம் வகுப்பறையில்
பள்ளியில் இருக்கவேண்டியவள்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

படக் கவிதை – 2





பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

படக் கவிதை – 1




பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.

படக் கவிதையாக காதல் கவிதைகளை மட்டும் உருவாக்கியிருந்தேன், அவற்றிக்கு நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இதோ சமூக கவிதைகளையும் படக் கவிதைகளாக சமர்ப்பிக்கிறேன்.

இந்த கவிதைகளை யூ-டியூபில் ஆயுத எழுத்து பாடலுடன் பார்த்து ரசிக்க ...
jagadeeswaran samuga kavethi

தங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஒருவன்




ஒன்றே குலம் ஒருவனே தேவன்
அதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை
அந்த ஒருவன் யாரென்பதை தவிர!

புதன், 5 ஆகஸ்ட், 2009

புரியாதவள்




நேற்று வரை பாதுகாத்து வைத்திருந்த
எந்தன் இதயத்தை உந்தன் பருந்து பார்வையால்
கொத்திக் கொண்டு பறந்து போனாய்,
அதை உனக்கு பரிசாக கொடுக்க வந்தபோது!

திங்கள், 27 ஜூலை, 2009

குப்பைத் தொட்டி




எவனையோ ஓர் இரவு சுமந்ததில்
என்னை பத்து மாதம் சுமந்தவள்
காமம் தீர்ந்து அவன் போனபின்பு
கருவலேயே கலைக்க முடியாமல்
பெற்றெடுத்து கொடுத்து போயிருக்கிறாள்
குப்பைத் தொட்டிக்கு பிள்ளையாய்

புதன், 22 ஜூலை, 2009

பாவம் ரோஜாக்கள்




உன் வருகையை எதிர்பார்த்து
என் கையிலிருக்கும் ரோஜாக்களெல்லாம்
வாடிப்போய் விட்டன்!
சீக்கிரம் வந்து விடு
பாவம் ரோஜாக்கள்!

சொளக்காட்டு பொம்மை



குருவி விரட்டும் பொம்மைக்கு
கோர்ட் சூட்டு போட்டு
அழகு பார்த்த விவசாயி
வயலில் இருக்கிறான்
வெறும் கொமணத்துடன்!

ஹிட்லர்




தனியொரு ஆளாக
தரணியாள நினைத்தவன்!

சாமானியர்களின் சர்வதிகாரியாக
சமாதிகளை நிறைத்தவன்!

உலகமே எதிர்த்தாலும்
உள்ளம் கலங்காதவன்!

வன்முறைகளின் அரசனாக
வாழ்ந்துக் காட்டியவன்!

காதலியை கடைசிவரை
காதல் செய்தவன்!

இவனொருவன் தான்
விதியையும் மாற்றி
வென்று காட்டியவன்!

காதல் கனி




நன்கு காய்த்த மரத்தில்
கல்லெடுத்து அடித்துக் கொண்டிருந்தேன்!
கல்களே கிடைத்துக் கொண்டிருந்தன
நீ பரிதாப் பட்டபோதுதான்
கிடைத்தது... காதல்கனி!

வியாழன், 16 ஜூலை, 2009

ஆதரவு தாருங்கள்




காதல் கவிதைகள் எழுதும்
ஒருகாதல் அனாதை நான்!
யாராவது உங்கள் காதலை
கொடுத்துச் செல்லுங்கள்,
எனக்குத் துணையாக!

கடவுளின் குழந்தை




ஆதாமுக்காக ஏவாலை மட்டும்
படைத்த ஆண்டவன்!
எனக்காக படைத்திருக்கிறான்
ஏராளமான பெண்களை!

வள்ளல்கள்




தத்தளிக்கும் முல்லைக் கொடிக்கு
தடி கொடுத்தால் போதாதா?
தமிழ்பாடும் கிழவிக்கு
தங்ககிலி கொடுத்தால் போதாதா?
காயம் பட்ட புறாவுக்கு
காலில் மருந்திட்டால் போதாதா?
மயில் ஆடும் அழகை
மதிநிறைய் ரசித்தால் போதாதா?

அறிவுகொண்டு ஆராய்ந்து கொடுக்க
அவகாசம் இல்லாமல் போனதற்கு
அன்புதான் காரணம் என்கின்றனர்
அனைத்தும் உணர்ந்தவர்கள்!

அதனால் தான்
மயிலுக்கு துணி! முல்லைக்கு தேர்!
ஔவைக்கு கனி! பறவைக்கு தசை!
வள்ளல்கள் கதைகளில்
வற்றாது நிறைந்திருக்கிறது
நகைச்சுவை நிகழ்வுகள்!

சனி, 11 ஜூலை, 2009

சட்டம் ஒரு ஆமை




இரண்டு நூறுரூபாய் திடுடியவன்
இரண்டு வருடங்களாய் இருக்கிறான்
விசாரனைக் கைதியாக
இன்னும் கூட நாளாகலாம்
விசாரனை முடித்து தீர்ப்புதர
அவன் விடுதலைச் செய்யப்படும்போது
அவனிடமிருந்து விடுதலையாகியிருக்கும்
இளமையும் இனிமையும்!

நான் கவிதைப் பிழியப்பட்ட காகிதம்




நண்பன் கவிதைக் கேட்டானென
நள்ளிரவு விழித்து எழுதிய கவிதை
அடுத்த நாள் அவன்காதலிக்கு சொந்தமானது
அவனின் காதல் நினைவாக!

வெள்ளி, 10 ஜூலை, 2009

ராமர் பாலம்




கடவுள் மனிதனைக் காத்தது போய்
மனிதன் கடவுளை காத்து நிற்கிறான்
மக்களுக்கு நன்மையென்றால்
ராமனென்ன மறுக்கவாப் போகிறார்
பாலம் உடைத்து பாதை அமைக்க?

வான் மேகம்




அடியே வெள்ளை மேகமே
உன்னால்தான் மறைந்து போகிறான்
என் லட்சியமென்னும் சூரியன்!

வேண்டியதெல்லாம்




எம் தமிழ்மக்கள்
சொர்கத்திற்கு வரும்போது
மேளங்களின் தாளங்கள் வேண்டாம்!

அது அவர்களுக்கு
வெடிகுண்டுகளை ஞாபகம் செய்யக்கூடும்!

நாதசுரங்களின் நாதங்கள் வேண்டாம்
அது அவர்களுக்கு
துப்பாக்கிகளை ஞாபகம் செய்யக்கூடும்!

இன்னும் அங்கிருக்கும்
கற்பக விருச்சமோ காமதேனுவோ,
சோமபானமோ சொக்கும் நடனமோ,
எதுவும் வேண்டியதில்லை!

அவர்களுக்கு வேண்டியதெல்லாம்
இங்கு கிடைக்காத அமைதி மட்டுமே!

ஞாயிறு, 28 ஜூன், 2009

அறிவிப்பு பலகை




வசைப் பாடியவரையும்
வரவேற்க்கும் வைகுண்டம்!

கடவுளை நினையாதோருக்கும்
கதவுதிறக்கும் கைலாயம்!

சாமிகள் சாதிபார்பதில்லை
சாதரணமனிதன் இதையேற்பதில்லை!

ஆலயத்தின் முன்னே
அதிகாரவர்கம் வைத்திருக்கிறது
அயல்மதத்தினர் வரவேண்டாமென்ற
அறிவிப்பு பலகையை!

அன்புடன்

அன்பார்ந்த காட்டுப்புத்தூரான் கவிதைகள் வாசகர்களே,

இந்த காட்டுப்புத்தூர் அன்பனின் கவிதை தினத்தந்தி குடும்ப மலர் இதழில் சென்ற 14ம் தேதி வெளிவந்தது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பு கரம் கொண்டு ஆதரித்த வலைப்பூ நண்பர்களுக்கும்,விமசர்கர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல கோடி....

அன்புடன்,
ந.ஜெகதீஸ்வரன்

வெள்ளி, 22 மே, 2009

ராஜிவ்-கொலையல்ல தண்டனை




தம்மினத்தை காப்பாற்ற போராடிய
தமிழினத் தலைவனை கொன்றுவிட்டு
தண்டனை என்கிறார்கள்!

உண்மையில்
தம்மினத்தை அழித்ததற்காக
தமிழ் பெண்ணொருத்தி கொடுத்தே
தண்டனை! தண்டனை!! தண்டனை!!

கடவுளின் கவலை




உலக மக்களுக்காக
சிலுவையில் இறந்தவரும்
கல்லடி வாங்கியவரும்
கன்னத்தில் கைவைத்து
கவலையில் அமர்ந்திருக்கின்றனர்!

அவர்களின் பெயரை
அதிகமாய் கூறிக்கொண்டு
கொலை செய்திடும்
மனிதர்களை கண்டு!

ஆதரவு





பெண்பித்தன் என்றென்னை
புகழ்ந்திரும் எதிர்க்கூட்டம்
வாய்பிளந்து பார்க்கிறது
வருவோர் போவோரையெல்லாம்!

சாலையில் செல்லும்
சேலைகளின் விலகல்களை
உற்றுநோக்கும் உயர்ந்தவர்கள்
உரிமையோடு வசைபாடுகின்றனர்!

காமக் கவிதை
கவிதையின் ஓர் அங்கம்
என்கருத்தை ஆதரிப்போரெல்லாம்
என்னுடைய சங்கம்!

எச்சரிக்கை




பிச்சைக் கேட்கிறேன்
பிள்ளைகளை மட்டுமாவது
புத்தனாக வளருங்கள்-இல்லையேல்
பிசாசாகிவிடும் உங்களைப்போல!

மாங்காய்த் தீவு




தினம் தினம்
சாலையில் கிடக்கும்
சாதாரண மனிதர்களின் பிணங்களை
சாதனைகளாக பேசுகின்ற
மரண தேவன்
ஆட்சி செய்கிறான்
இந்த மாங்காய்தீவில்!

அன்னையான காதல்




தாளாட்டுப் பாடி
தட்டிக் கொடுத்து
தூங்க வைக்கிறது காதல்!
உன்னைப் பற்றி
கனவு காணச் சொல்லி!

தலைப்பில்லா கவிதைகள்




களிக்கின்ற மனம்
கவிதைகளின் பிறப்பிடம்!

செழிக்கின்ற நிலம்
செம்வறுமையின் இறப்பிடம்!

துளிர்க்கின்ற மரம்
துரத்தின் மறைவிடம்!

பழிக்கின்ற மனிதம்
பாவத்தின் உரைவிடம்!

விலைமாது



என் பசிக்கு
அவள் உணவானாள் - ஏனென்றால்
அவள் பசிக்கு
அவளிடம் இல்லை உணவு!

அபிசேகம்



அம்மனுக்கு அபிசேகம் செய்ய
ஆலையத்திற்கு சென்றேன்!
பீடம் மட்டும் இருப்பதாக
புலம்பிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்!

இந்த அதிசயத்தை சொல்ல
உன் வீட்டிற்கு வந்தால்- ஆச்சிரியம்!
உனக்கு அபிசேகம் செய்ய
அங்கே இருக்கிறார் அம்மன்!

பந்தையம்




உள்ளே நடக்கும்
ஓட்டப் பந்தயத்தில்
ஒன்றாவதாக வருபவனுக்கே
தாய்வயிற்றில் இருப்பதற்கான
தார்மீக உரிமை!

தொடுவானம்




இடம் மாறிக் கொள்ளலாம்
கொஞ்ச காலம் மட்டுமென,
ஆகாயம் இறங்கி வந்து
பூமியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது
உன்னை சுமக்க ஆசைப்பட்டு!

மழை



கைகளில் இருக்கும் குடையை
மடக்கி வைத்திடு!
தேவதையின் ஆசிர்வாதங்கள்
உன்னைத் தேடி வருகின்றன
மழையின் ரூபத்தில்!

பாவம் பணக்காரர்கள்




வருடத்திற்கொரு தம்பியோ தங்கையோ
விளையாடக் கிடைத்து விடுகிறார்கள்
சேரிக் குழந்தைகளுக்கு!

பாவம் பணக்கார குழந்தைகள்
பஞ்சுமெத்தையில் கட்டிப்பிடித்து தூங்குகின்றன
உயிரில்லாத கரடி பொம்மைகளை!

கனவு




எல்லோரும் உறங்குவதற்காக
கனவு காண்கின்றார்கள்!
கனவு காண்பதற்காக
நான் உறங்குகிறேன்!
நீ கனவில் வருவாயென!

கால்கள்




தங்க கொலுசிட்டு
காரில் செல்லும் கால்களுக்கு,
எப்படி தெரியும்
தார்சாலையில் செருப்பின்றி
நடந்து செல்லும்
கால்களின் துயரம்!

பி.கு-
பதினொன்றாம் வகுப்பு
பருவக் குமரி முதல்
ஆறாவது படிக்கும்
அரைடவுசர் பையன் வரை
வெயிலில் வெறும் கால்களுடன்
பள்ளிக்கு வருபவர்களை
கண்டதன் வருத்தம்
இக்கவிதை...

தலைப்பில்லா கவிதை




தொடர்ந்து அடித்த மழை
சற்று ஓய்ந்திருக்கிறது
மகிழ்ச்சியுடம் சிலர்
சுள்ளி பொறுக்க செல்கின்றர்!
நான் மட்டும் சோகமாக இருக்கிறேன்
நாளை பள்ளி செல்ல வேண்டுமே!