தங்க கொலுசிட்டு
காரில் செல்லும் கால்களுக்கு,
எப்படி தெரியும்
தார்சாலையில் செருப்பின்றி
நடந்து செல்லும்
கால்களின் துயரம்!
பி.கு-
பதினொன்றாம் வகுப்பு
பருவக் குமரி முதல்
ஆறாவது படிக்கும்
அரைடவுசர் பையன் வரை
வெயிலில் வெறும் கால்களுடன்
பள்ளிக்கு வருபவர்களை
கண்டதன் வருத்தம்
இக்கவிதை...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!