வரிசை வரிசையாக செல்லும்
எறும்புகளுக்கு நடுவே
விரலால் கோடிட்டுவிட்டு
அமைதியாக இருக்கின்றேன்!
அவை கைவைத்தவனை
வசை பாடுவதில்லை
கையெடுத்து கடவுளையும்
துனைக்கு அழைப்பதில்லை!
கலவரமாக கலைந்தோடினாலும்
கவலை கொள்ளாமல்
மீண்டும் வந்துசேர்கின்றன
வரிசைக்கு நிதானமாய்!
பி.கு-
படத்திற்காக ஒரு கவிதை
சில படங்கள்
கவிதைகளுக்காக!
ஆனால் இக்கவிதை
இப் படத்திற்காக!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!