வெள்ளி, 22 மே, 2009

புதுஉறவு




அது தூரத்து சொந்தின் திருமனம்
சில தெரிந்த முகங்களும்
பல தெரியாத முகங்களும்
உளவுகின்ற மண்டபத்தில்
மலங்க மலங்க விழித்துக்கொண்டு
பலியாடு போல அமர்ந்திருக்கிறேன்!

படிக்காத மனிதர்கள் பலர்
தாங்களாகவே முன்வந்து
அறிமுகம் செய்து கொள்ளுகின்றபோது
படித்தவர்கள் மட்டும் பாறைபோல்
இறுகிக் கிடப்பதை
நினைத்துக் கொண்டிருக்கையில்
வருகிறது பந்திக்கான அழைப்பு!

உணவுகளின் வழக்கமான வரிசையில்
உண்ணும் போது தெரிகிறது
எனக்கருகே அமர்ந்திருப்பவரின் காத்திருப்பு
அவருக்காக அரைகுறையாக உண்டுவிட்டு
ஒன்றாக கையளம்பும் இடத்தில்
பிறக்கிறது எனக்கான புதுஉறவு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!