வெள்ளி, 22 மே, 2009

கடவுளுக்காக காத்திருப்பு




என்மீது வீசப்பட்ட கற்கள்
சதைகளை பதம் பார்த்து
ரத்தம் தோய்ந்து விழுகின்றன
நான் வாழ்கின்ற பூமியில்!

என்னுடன் ஒன்றாக
இன்பம் அனுபவித்தர்களும்
கூட்டத்தில் கலந்திருக்கின்றனர்
கருனையோ கலக்கமோ இன்றி!

நான் மட்டும் நம்பிக்கையுடன்
நெடுநாட்களாய் காத்திருக்கிறேன்
இந்த தவறுகளை எல்லாம்
தடுக்க வரும் கடவுளுக்காக!

உங்களிடம் இருக்கும் கைப்பேசியிலிருந்து
கடவுளின் கைப்பேசி எண்ணிற்கு
ஒரு அழைப்பை விடுங்கள்
இந்த அபலையின் துயர்தீர!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!